
தனியே சிரிப்பதும்
தனக்குள்ளே பேசுவதும்
தனிமையில் தவிப்பதும்
உலகை மறப்பதும்
ஏன்
சந்தோஷத்தில் அழுவதும்
துக்கத்தில் சிரிப்பதையும்
சிலர் பேத்தல் என்றார்கள்
நான் காதல் என்றேன்
எனக்கு
மன அழுத்தம் என்போர்க்கு
எப்படி தெரியும் அவள்
நினைவுகளை
பல வருடங்களாய்
தேக்கிவைப்பதால் தான்
இந்த அழுத்தமென்று
அவள் எண்ணங்கள் மட்டுமே
நிறைந்ததால் தான் அது
மன நிறைவென்றேன்
மற்றவரோ அதை
மனசோர்வென்றனர்
உலகமே புரியாமல், அறியாமல்
ஒரே சிந்தனையுடன்
வலிகளும் வேதனைகளும்
இருந்தும் அதை மறந்தோ
மறைத்தோ வாழ்வது
போன்று பல
பொதுவான அறிகுறி
காதலுக்கும் மனநோய்க்கும்
இருக்குமென்பீர்களேயானால்
நான் சொல்லவேன்
காதலிருக்கும் எல்லா
மனமும்
அந்த மனம் பெற்ற
எல்லா மனிதருமே
மன நோயாளி தான்
சரி யாரோ என்னமோ
சொல்லிவிட்டு போகட்டும்
இதை பைத்தியம் என்றால்
இதன் வைத்தியம்
என்னவள்,
என்னவள் காதல் மட்டும்
தான்
என்னவளே !!!
நான் கொண்டிருப்பது
காதலோ, பிறர் சொல்வது
போல் மனநோயோ
எதுவாகினும் எப்படியாவது
என்னை காப்பாற்றி
கொடு உன்னிடம்
புன்னகை தேசத்து
இளவரசியே
உன் முகவரி
ஆம் உன் முக-வரி
தேடித்தானோ இத்தனை
வண்ணத்துப்பூச்சிகள்
சிறகடித்து
அலைந்திருக்கின்றன???
ஒருவேளை உன் புன்னகை
கொண்டே உயிர் வாழ
நினைத்திருக்கும் போலும்
அவைகளுக்காக
உதிர்த்துவிடு உன் புன்னகையை
உனக்கும் கூட தெரியாமல்
அவைகளோடு நானும்
கொஞ்சம் வாழ்ந்து விட்டு
போகிறேன்
தூரத்தில் நின்று
உன் புன்னகையின் அழகை
ரசித்துக்கொண்டே
என்னுயிரே
அழகாய் பேசுவதும்
புன்னகைப்பதும்
உன் கண்களே
செய்யும் எனில்
உன் இதழ்கள்??
எப்போதுமே
அதன் பார்வை
என் கன்னத்தின்
மீது மட்டும்
படட்டும்...
காதலிலும் கூட
எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்று
ஏதோ ஒரு புள்ளியில்
ஏதோ
ஒரு வகையில்
இருக்கத்தான் செய்கிறது
எதிர்பார்ப்பு இல்லாத ஒரே
உறவு 'நட்பு' தான் என்றேன்
இதையே முழு மனதாய்
நம்பினேன்
நம்பிக்கையின் மறுபெயரே
நட்பு என்பது இந்நாளில்
மாறிப்போய்
நண்பனின் நம்பிக்கையை
உடைத் தெரிவதே நட்பு
என்றாகிவிட்டது போலும்
என் நம்பிக்கையை
உடைத்திடவும்
நண்பன் என்ற பெயரில்
நட்பு என்ற போர்வையில்
தன்நலம் மட்டும் காணும்
தன் தேவைகளுக்காகவே
வாழும் சில பதர்களும்
உண்டென்று அண்மையில்
தான் உணர்ந்துகொண்டேன்
எனக்கோ என் நண்பனின்
வார்த்தையே உலகம்
அவனுக்கோ உலகத்தின்
வார்த்தைகளே கடவுள்
நானோ அவன் தோழமையை
வேண்டிநின்றேன்.அவனோ என்
நட்பை பொழுதுபோக்காய்
எண்ணியவன் என்னை
காயப்படுதிருந்தாலும் கூட
ஏற்றுக்கொள்வேன்,
பொறுத்துக்கொள்வேன்
எம் நட்பை கேவலப்படுத்திய
ஈனப்பிரவியவன்.
உறவுகளுக்கு தான்தான்
இலக்கணம் எழுதியதாய்
அவனுக்கோர் நினைப்பு
அடிக்கடி போலி உறவாய்
சித்தரிக்கிறான் என் நட்பை
உண்மை தான்
கண் தெரியாதவன் யானையை
பற்றி விவரிக்கிறான்
என்னை பிரிந்து விட்ட
சுத்தமாய் மறந்த விட்டவன்
சொல்லிக்கொள்கிறான்
அவன் மேல் தவறில்லையென
உண்மை தான்
எதிர்பார்ப்பு என்றொன்று
நட்பில் இல்லை என்று நம்பும்
நானே அவன் அன்பையும்
தோழமையும்,
அவனிடம் உண்மையும்,
நட்பில் நேர்மையும்
எதிர்பார்த்தது, எதிர்பார்ப்பற்றது
நட்பென நம்பியது, எல்லாமே
அவன் சொல்வது போலே
என் தவறுதான்
நண்பனிடம் நட்பை தவிர
மற்றதனைத்தையும் எதிர்பார்க்கும்
நட்பின் பொருளறியா மூடனை
நண்பனாக்கி அழகு பார்த்தது
நான் செய்த மன்னிக்கபடமுடியாத
பெரும் குற்றம்தான்
ஒப்புக்கொள்கிறேன் இப்போது
என்ன செய்வது
பழகப் பழக தானே பாலும்
புளிக்கிறது, சில நட்பின் குணம்
தெளிவாய் தெரிகிறது
புளித்த பாலாய் நட்பு
மாறினாலும் அதுவும் ஒரு
சுவையாய் பருகிட துணிந்தேன்.
இன்றோ அது உயிர் எடுக்கும்
நஞ்சாய் மாறிப்போனது
சிலர் சொல்லுவார்கள்
காலப்போக்கில் நண்பர்கள்
குறைந்து போவார்களாம்
நான் சொல்வேன்
உண்மையற்ற நண்பர்கள் தான்
தொலைந்து உண்மையான
நண்பர்களால் வாழ்க்கையில்
நிம்மதியும், சந்தோசமும்
நிறைந்து போகுமென்று
நான் பழகியதில்
இப்படி தொலைந்து
போக வேண்டிய நண்பன்
இல்லையில்லை மனிதன்
அதுவும் இல்லை
எப்படி சொல்ல அவனை??
முடிந்த வரை
பொறுத்தும் விட்டேன்
நண்பர்கள் பட்டியலிலிருந்து
நீக்கியும்விட்டேன்
இன்னமும் பார்பவரிடம் எல்லாம்
புகார்செய்து கொண்டுதான்
இருக்கிறான் என்னை
நானோ
இன்னும் அமைதியா ய் தான்
இருக்கிறேன், காரணம் என்றும்
ஆதவன் புகழ் மங்கி
விடுவதில்லை நன்றிகெட்ட
நாய் அதை பார்த்து
குரைப்பதினால்
பாவம் அது வாய் வலிக்க
குறைத்துக்கொண்டே இருக்கட்டும்
சூரியனாய் நான் தினமும்
உதித்துக்கொண்டே இருக்கிறேன்
என் வழியில்...
( கண்டிப்பாய் துரோகிகளுக்கு மட்டும் )
எந்தக்கவிஞனும்
உன்னை இவ்வளவு
அழகாய், தெளிவாய்
வர்ணிக்க முடியாது
என்று தெரிந்துதான்
உன்னை பற்றி நீயே
கவிதை
எழுதிக்கொள்கிறாயோ ??
இருந்தாலும்
நீ எழுதும் கவிதையும்
உன் போல்
பேர் அழகுதான்
அது
உன் நெற்றி பொட்டு
நீ ஒரே கவிதையில்
கவிஞர் ஆகிவிட்டாய்
ஆம்
என்னை ஒரேயொரு
கவிதையால்
ரசிகன் ஆக்கிவிட்டாய்
உனக்கும்
உன் கவிதைக்கும்
கடவுளுக்கு கண்கள்
இருக்கிறதா எனக்குள்ளேயே
கேட்டுக்கொண்டிருந்தேன்
என் கஷ்டங்கள் தீர
கடவுள் கண்திறப்பாரா
புலம்பிக்கொண்டிருந்தேன்
அவளுக்கே தெரியாமல்
என் கேள்விக்கான விடையை
என்னவள் எனக்கு
உணர்த்தினாள்
அழகாய் கண்மூடி
இரு கை கூப்பி
மெதுவாய் முணுமுணுத்து
மெலிதாய் அவள்
வேண்டிக்கொள்கையில்
அந்த கடவுளும் அந்த
ஒரு நொடி கண்திறக்கிறார்
அவள் பிராத்தனையில்
என் வேண்டுதல்
நிறைவேறுகிறது
அவள் வேண்டுதலால்
என் கஷ்டம் தீர்கிறது ..

நீ அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது என்று
நான் ஒரு போதும் நான்
பயந்து போவதில்லை
ஆனால் கண்டிப்பாய்
வியந்து போகிறேன்
வான் தேவதைகளுக்கு
நிகராய் இல்லையில்லை
அதை விடவும்
அதுவும் நம் பூமியில்
ஓர் அழகியா என்று..
என்னைப்போலவே
உன்னைக்காணும்
எவரும் வியப்பில்
வீழ்வதால் என்
வியப்பிலும் கூட
உண்மை இருக்கத்தான்
செய்கிறது
உன் ஒருவளை படைக்கவே
தன்னிடம் உள்ள
மொத்த கற்பனைகளையும்
உபயோகித்து விட்டதாகவும்,
உலகில் யாருக்குமே தராத
அழகையும் அறிவையும்
உனக்கு மட்டுமே தந்து
விட்டதாகவும்
உலக மகளிர் யாவரும்
பிரம்மன்மேலேயே வழக்கு
தொடர்ந்துவிட்டனராம்
புது பிரச்சனையாய்
தேவகண்ணிகயரையும்
"இது ஓர வஞ்சனையென"
போராட்டத்தில்
இறங்கியுள்ளனராம்
யாரோ எப்படியோ
போகட்டும்.எனக்கென்ன ???
எனக்காகவே படைக்கப்பட்டு
நீ எனக்கே எனக்காய்
இவ்வுலகில் இருக்கும் வரை
எனக்கு என்ன கவலை??
யார் சொன்னது தேவதைகள்
வெள்ளை நிற உடைகள்
தான் அணியுமென்று??
என்னவளுக்கு பிடித்தே
கருப்பு நிற உடைகள் தான்
என் தேவதையின் உள்ளம்
வெள்ளை என்பதால்
கருப்பு உடையிலும்
அவள் அழகு தான்
போடி உனக்கு மழை
எவ்வளவோ பரவாயில்லை
மழை எதிர்பாரா நேரத்தில்
சிறு சாரலாகவாவது வந்து
வறண்டு கிடக்கும் நிலத்தை
நனைத்துவிட்டு செல்கிறது
ஆனால் நீயோ
பல நாட்களாய் உன் காதலை
எதிர்பார்த்து இருண்டு போன
என் கனவுகளுக்கு
புன்னகை எனும் ஒளியேற்றி
வறண்டு போன வாழ்க்கைக்கு
சிறு தூறலாய் நீரூற்றி செல்ல
இன்னமும் மறந்து கொண்டே
மறுத்துக் கொண்டே இருக்கிறாய்
நீ என்னை தூக்கி
எறிந்து விட்டு சென்ற பின்
சொல்லமுடியா தனிமையில்
நான்மட்டும் தவிக்கையில்
கதை ஒன்று நினைவில் வந்தது
எறும்பொன்றை விளையாட்டுச்
சிறுவன் காலால் மிதித்துக்கொல்ல
மறுபிறவியில்
எறும்பு அந்த சிறுவனாகவும்
சிறுவனாகவும் பிறக்க
எறும்பு பழிவாங்கியாதாம்
இது வெறும் கற்பனை கதையாகவே
இருக்கட்டுமே, இப்படி உண்மையாய்
நடக்குமானால் மறுபிறவியில்
நான் நீயாகாவும்
நீ நானாகவும் பிறந்திட,
நீ காதலித்திட நான் மறுத்து
உன்னை மறந்து
உன்னை பிரிந்து சென்றிட வேண்டும்
நீ நானானதால் அப்போது
ஒருவேளை, உனக்கு என் வலியும்,
துயரும், வேதனையும் புரியும்
அந்த நாளிலும் கூட உன்னைபோல்
கல்நெஞ்சம் உடையவளாய் நான்
பிறந்திடமாட்டேன், இருந்திடமாட்டேன்
காரணம்
நீ ஏற்படுத்திய ரணம் ஏழேழு
ஜென்மங்களும் மறக்காது என்பதால்
இந்தப்பிறவியில் அல்ல வேறு
எந்தப்பிறவியிலும் உன்னை
காயப்படுத்த விரும்பவில்லை நான்
இப்படி பழிவாங்குவது கட்டாயம்
என்ற நிலை வந்தால்
இனி எனக்கொரு புது பிறவியே
தேவையில்லை என்று
இறைவனிடம் மன்றாடி
உன் நினைவுகளுடனும்
உன் சந்தோசத்திலும்
உயிர் வாழ்வேன் ...
அரசனொருவன் தான்
இறக்கும்போது சொன்னானாம்
"இறந்த மனிதன் எதையும்
எடுத்துக்கொண்டும் போவதில்லை
கொடுத்துவிட்டும் செல்வதில்லை
என்று
எனக்கோ இதில் சிறு மாறுபாடு
இறந்து போகும் மனிதன்
தன உறவுகளுக்கு விலை
மதிப்பற்ற நினைவுகளை
தந்துவிட்டு
உறவுகளின் கலப்படமற்ற
கண்ணீரையும், மாசற்ற
அன்பையும் எடுத்துக்கொண்டு
தான் செல்கிறான்..
ஒருவேளை அவன் எடுத்து
சென்றது தான் சொர்கத்தின்
திறவுகோளோ??
இறந்தவன் சொர்கத்தை தான்
அடைந்தானோ தெரியாது
நாம் அவனை அங்கு
சந்திக்கும் வரை
கண்டிப்பாய்
பிரிந்து சென்றவர்கள்
நமக்காய் விட்டுச்சென்ற
நினைவுகளை உயிராய்
காப்பவன் அவர்களை
பிரிவதுமில்லை
சொர்கத்தை பூமிலேயே
பெறுவதால் அது
தன இறப்பின் போது
கிடைக்க வேண்டுமென
சிந்திப்பதுமில்லை
இழப்போ, இறப்போ
இவை இரண்டும்
வார்த்தை வடிவிலேயே
மிகக்கொடுமை தான்
நம் வாழ்க்கை வழியில்
வந்தால் ???
நம் பாசமிகு உறவுகளின்
இறப்பு, நம் வாழ்வின்
மிகப்பெரிய ஈடுசெய்ய
முடியா இழப்பு
இறந்து போனவனுக்கு தான்
அது வெறும் இறப்பு
அவன் உறவுகளுக்கோ அது
தான் பெரும் இழப்பு
இறப்பே இல்லா இறைவன்
அதை நமக்கேன் தந்திட்டான்?
தனக்கே இல்லாவிட்டாலும் தன்
படைப்புகளாவது பெறட்டும்
என்ற நல் எண்ணமோ ??
ஒருவகையில் இறப்பு என்று
ஒன்றிருப்பதால் தான் மனிதம்
இன்னமும் மதிக்கபடுகிறது
உண்மை தான்
ஆனால் இறப்பை தந்த
இறைவன் ஏனோ அதை மறக்க,
ஏற்க மனதை தராதது தான்
வருத்தம்
மறதி என்ற ஒன்றை தர
தேவையான நேரத்தில் தர
ஏனோ சில சமயங்களிம்
மட்டும் இறைவன்
மறந்துவிடுகிறார்
உறவுகளின் பெருமை
அதை இழந்தால் தான்
தெரியுமென்றால்
அதை நான் தெரிந்து
கொள்ளவே விரும்பவில்லை
என் இறப்பு வரையிலும் கூட
நிரந்தரமாய் என்னை விட்டும்
இந்த மண்ணை விட்டும்
பிரிந்து போன
என் சில பாச, நேச உறவுகளுக்கு
எனக்கு தெரிந்த விதத்தில் ஒரு
கண்ணீர் அஞ்சலி இலையில்லை
கவிதை அஞ்சலி
பூக்களே தங்களை
பறித்துவிடும் படி
உன்னை கெஞ்சுவதால்
உனக்கு மட்டும்
"பூக்களை பறிக்காதீர்"
என்பதற்கு விதிவிலக்கு
சரி பூக்கள் ஏன் இவ்வாறு
உன்னிடம் மன்றாடுகிறது ??
ஒருவேளை
நாட்கணக்கில் செடியில்
இருந்து என்றோ ஒரு நாள்
வாடுவதை விட
நொடி பொழுது உன் கையில்
இருந்த சந்தோஷத்தில்
மடிவதே மேல் என்ற
நினைப்பில் தானோ??
என்னவளே!!!
என்றுமே நம் வீடு
கண்ணாடி முன்
நில்லாதே
உன்னை சில நொடிகள்
பிரதிபளிக்கும் இன்பத்தில்
அது நாள் முழுவதும்
மூழ்கிக்கிடக்கிறது
அந்த சில நொடியில்
அது நீயாய் ஆகிவிடுவதாய்
எண்ணிக்கொண்டு தன்
இயல்பையும் குணத்தையும்
மறந்து நிற்கிறது
உன்னை சரியாய்
பிரதிபளித்த பின்னர்
எவர் வரினும் அது
அவர்கள் சிரிக்கும் போது
அழுவதாயும்
அழும் போது சிரிப்பதகாவும்
மாற்றிக்காட்டுகிறது
உன் வீட்டு கண்ணாடிக்கு
பேய் பிடித்ததென
சில மூடர்கள் சொல்கிறார்கள்
ஆனால் அதற்கும் கூட
உன் அழகை பிடித்த
விஷயம் நான் மட்டுமே
அறிவேன்
ஒரே பொருள்
இல்லையில்லை
ஒரே செயல்
துன்பம்தரும் நோயாகவும்
அதை குணப்படுத்தும்
மருந்தாகவும்
இருக்குமென்றால்
அது தான்
உன் மௌன புன்னகை
என்பேன் நான்
ஏழு தான் உனக்கு பிடிக்காத
எண்ணோ??
ஒரு வாரத்தில்
உன்னைப்பார்க்கும் நாட்கள்
மட்டும் கணக்கில் கொண்டால்
ஒரு வாரத்திலும் எனக்கு
ஏழு நாட்களில்லை
உலகில் ஒருவரை போலவே
ஏழு பேர் இருப்பார்களாம்
உன் விஷயத்தில் இது
பொய் தானென்பேன்
நீ ஒருவளே
அந்த ஏழு பேரின்
அழகையும், அறிவையும்
உள்ளடக்கி பிறந்தாயே
பின்பு அவர்களுக்கு
என்ன மிச்சம்
இருக்கப்போகிறது??
இந்த உலகில்
உன்னை போன்று
நீ ஒருவளே
இருப்பதால், உலக
அதிசயங்களும் கூட
இனி ஏழல்ல
உன்னையும் சேர்த்து
அது இப்போது எட்டு
துரதிர்ஷ்டவசமாக
என் பிறந்தாநாளும்
எழாம் மாதத்தில்
எழாம் நாள்
நீ, என் உலகத்தின்
தொடக்கம் முதல்
கண்ணுக்கெட்டிய தூரம்
வரை முழுவதுமாய்
பரவி இருக்கும் வானம்
எங்கோ தூரத்தில்
பூமியும் வானமுமாகிய
நாம் இணைவதாய் ஒரு
நம்பிக்கை
அதே நம்பிக்கையில்
அந்த இணைப்புபுள்ளியை
நம் வாழ்கையின்
தொடக்கப்புள்ளியை
அடைந்து விடும்
பயணத்தில் நம் காதல்
உண்மையோ பொய்யோ
எனக்கு தெரியாது
பலர் சொல்லுவார்கள்
சில நதிகளில் நீராடினால்
இறந்த பின்பு சொர்கமாம்
ஆனால் எனக்கு தெரிந்ததோ
தண்ணீரில் உன் காலாடினால்
அந்த நதிக்கும்,
அதில் நீந்தும் மீனுக்கும்
கூட மோட்சம்
பின்னொரு நாளில்
நீ வந்து கால் நனைக்க
அவைகள் பூமியிலேயே
மோட்சம் பெறுவதற்காக
தானோ நம் முன்னோர்கள்
அந்நாளிலேயே நீர்நிலை
கண்டால் கால்நனைக்க
சொன்னார்கள்??
இருக்கலாம்
நீருக்கும் மீனுக்கும்
மோட்சம் தரும் உன் காலடி
அதை நெஞ்சில் சுமக்கும்
உன்னவனுக்கு என்னதான்
தரப்போகிறது எதுவென்றாலும்
நீ தருவதால் ஏற்றுக்கொள்ளும்
மனப்பக்குவத்துடன் நான்
வெறும் ஏமாற்றமும்,
வேதனையாகவும் இருந்தாலும்...
இறந்த காலம்,
நிகழ் காலம்
எதிர் காலம்
ஏன் எந்த காலத்திலும்
நிலவு அழகு தான்
அதே போல், நீ
சிரித்தாலும், அழுதாலும்
ஏன் முறைத்தாலும் எது
செய்தாலுமே
என்னவளே, நீ
என்றுமே எந்தன் நிலவு
தான், எப்போதுமே நீ
எனக்கு அழகு தான்
தேவதைகளில் ஆண் பாலினம்
இருக்கிறதா என்று நானறியேன்
சத்தியமாய் இருந்துவிட கூடாது
என்பது தான் என் ஒரே எண்ணம்
காரணம், என்னவளை போன்ற
தேவதைகளின் இளவரசிக்கு
அதே இனத்தில் திருமண
வரன் தேடுவார்களேயானால்
என் பாடு திண்டாட்டம் தான்
சுயம்வர போட்டியில் கூட பங்கேற்க
முடியாமலும், அவள் கிடைக்காமலும்
வெளியில்
தள்ளிவிடப்படுவேன்
பெரும் ஏமாற்றத்துடன்....
அதற்கு பின், என் காலத்தின் மீதி
நாட்களை அவள் நினைவுகளுடனும்
அவளை இழந்துவிட்ட சோகத்துடனும்
தான் கழிக்க வேண்டும் தனிமையில்
தோழியே !!! நீ ஏனடி என்
சிறு பிழைகளையும்
திருத்துவதாய் சொல்லிக்
கொண்டு, என் அருகிலேயே
இருந்து பழக்கப்படுதினாய்??
உன் நோக்கம் என்னவோ
நான் திருந்துவதாய்
இருக்கலாம், ஆனால்
எனக்கோ உன் அருகாமை
தான் தெளிவாய் புரிந்தது
பெரிதாய் தெரிந்தது
இன்றோ
நீ என்னுடன் இல்லாத போது
என் பிழைகள் அதிகமானது
என் மனமோ,
ருசி கண்ட பூனையாய்
பிழைகள் செய்தால் தான்
அதை திருத்த நீ வருவாயென
என்னை தூண்டியது
இப்படியே
என் பிழைகள் சேர்ந்து
இப்போது பெரும்
குற்றங்களும் ஆகிவிட்டது
"எப்போதும் என் மன
மாற்றங்களுக்கு காரணம்
நீ தான்" என்பேன்.
அதையே இன்றும்
அழுத்தமாய் கூறுகிறேன்
இந்நாளில் என் குற்றங்களின்
தண்டனைக்காக
குற்றவாளிக்கூண்டில் நான்
நிறுத்தப்பட்டிருக்றேன்
இப்போதும் என் நினைவில்
உன் பிரிவு மட்டுமே பெரிதாய்
அழுத்திக்கொண்டிருக்கிறது
இது அத்தனையும் நடந்தது
என்னவோ உன் வருகையை
எதிர்பாத்து தான்
உன் பிரிவின் துயரத்தால் தான்
இப்போதாவது வா !!!
என் தண்டனையை
நீ ஏற்பதற்காக அல்ல
அதை குறைப்பதற்காக அல்ல
எனக்காக வாதாடுவதற்கும் அல்ல
வந்து முடிந்தவரை என்னையல்ல
என் கடைசி நேர நம்பிக்கையைவாது
எப்படியாவது காப்பாற்று.
ஒருவேளை உன்னைக்
காணாமலே
என் தண்டனையை எற்பேனேயானால்
என் ஆவியும் கூட பின் நாளில்
இதே கூண்டில் குற்றம் சுமத்தப்பட்டு
உன் வருகைக்காய் காத்து நிற்கும்
இதுவரை மாறுதலையும்
மன்னிப்பையையும் தந்தவள்
இப்போது தண்டனைகளையும்
தருகிறாள் என்று சந்தோசமாய்
ஏற்றுக்கொள்கிறேன் என்
தண்டனையை
மற்றவருக்கு தெரியாது
இது எதோ நீ பெயருக்கு தரும்
குறைந்த பட்ச தண்டனை என்றும்
முன்பே நீ எனக்கு முன்பே
தந்துவிட்ட "பிரிவு" என்ற
மரண தண்டனையை பற்றியும்.
சத்தமிடாதே!!!
அழகாய், மௌனமாய் நீ
காட்டிய சமிக்ஞையால்
உன்னைக்கண்ட ஆனந்தத்தில்
துள்ளிக்குதித்துக்கொண்டிருந்த
என் இதயமும்
ஆர்ப்பாட்டமில்லாமல்
அமைதியாய் துடித்தது
ஏன், என்னை சுற்றி
இயங்கிக்கொண்டிருந்த
முழு உலகமும் தான்
இன்று நிசப்தம் என்ற
வார்த்தையின் பொருளை
உன்னால் தான், நான்
உணர்ந்துகொண்டேன்
இவ்விடம்
காதல் கவிதைகளை
சமர்ப்பிக்கவும் சொல்லியது
ஓர் வலைதளம்
எனக்கு கவிதைகள் ஏதும்
தோன்றாததால்
காதலுடன் சமர்ப்பித்தேன்
உன் புகைப்படத்தை
சிறந்த கவிதையாக
தேர்ந்தெடுக்கப்பட்டது
என் கவிதை
ஒருவேளை நீ தான்
என் முதல் காதல்
என் முதல் கவிதை
என் முதல் காதல் கவிதை
என் முதல் கவிதை காதல்
எல்லாமுமே !!!
என்பதால் தானோ
எனக்கு இந்த பரிசு ??
நீயும் நானும்
பேசிக்கொண்டிருக்கையில்
நேரம் போவதே
தெரிவதில்லை என்று
எனக்கு நானே
நினைத்திருக்கிறேன்
ஆனால்
எத்தனையோ யுகங்களும்
கூட கடந்து போயிருக்கிறது
நம் பேச்சு என்பது
"சரி நான் போகட்டுமா??
நேரம் ஆச்சு ?" என்று
நீ சொல்லிவிட்டு
புறப்படுகிற போது தான்
அதை உணர்ந்துகொள்கிறேன்
இன்னமும் கூட
இதுபோல் பல யுகங்களை
நம்மை அறியாமலே நாம்
கடக்க விரும்புகிறேன்
அனுதினமும்.....
பெண்ணே
மாலை மங்கும் நேரம்
கடற்கரை காண நாம்
போக வேண்டாம்
என்றேனே கேட்டாயா??
இப்போது பார்
கலங்கரை விளக்கமென்று
கப்பல்கள் நாம் இருக்கும்
கரைக்கு விரைகிறது
உன் கால் நனைத்த அலைகள்
திரும்ப கடலுக்கு செல்ல
மறுக்கின்றது
அந்த சூரியனும் கூட
உன்னை கண்டு விட்ட
மறைய மனதில்லாமல்
அடம் பிடித்து நிற்கின்றது
நானோ
இவையெல்லாம் எப்போது
பழைய நிலைமைக்கு செல்லும்
என்று காத்து நிற்கிறேன்
அது ஏனோ
உன்னைக்கண்டால் மட்டும்
எதுவுமே மாறிவிடுகிறது
இயற்கையும் கூட குழம்பி
விடுகிறது
இயற்கைக்கும்,
மற்றவைகளுக்கும்
இது புதிதாய் தெரியலாம்
ஆனால் எனக்கோ உன் அழகால்
ஏற்ப்படும் மாற்றமும், குழப்பமும்
பழக்கப்பட்ட வாடிக்கை
வாடிக்கையாகிவிட்ட பழக்கம்
ஏனோ நீ விலகிச்
சென்ற நொடியிலேயே
என் கவிதை திறனும்
என்னை விட்டு நீங்கிச்
சென்றது ..
என் சிந்தனையில்
பிறந்த பல கவிதைகளும்
என் தோழியாய்
நீ வந்த பிறகே பெரிதும்
வெளிப்பட்டது..
இன்றோ உன்னுடனே
அது மறைந்தும்விட்டது
என்னைக்காட்டிலும்
அது தான் உனக்கு
உண்மையான தோழனாய்
இருந்தது போலும்
என் கவிதைகளே
கூட இன்று எனக்காக
என்னுடன் இல்லாமல்
போனது தான்
என் இன்றைய நிலைமை
மொத்தத்தில் நீயும் இல்லை
என் கவிதைகளும் இல்லை
நம் நட்பும் இல்லை
என் வாழ்வில் இனி
அர்த்தமும் இல்லை
நீ வேண்டுமானால் என்னை
விட்டுச் சென்றிருக்கலாம்
ஆனால் உன் நட்பை
என்றுமே விட விரும்பாதவன்
நான்
இப்போதும் கூட உன்
பிரிவை விட, இனி
உனக்கு ஆறுதலாய்
என்றும் உன் நண்பனாய்
நான் இல்லமால் போனாலும்
என் கவிதைகளாவது இருக்கும்
என்பதை எண்ணி என்னை நானே
தேற்றிக்கொள்கிறேன்
நீ என்னை முழுவதுமாய்
விட்டு விலகிச்சென்றிருக்கலாம்
அது ஏனடி உன் நினைவுகளை
காற்றில் பரவவிட்டு சென்றாய்
எனக்கு விருப்பம்
இல்லாமல் இருந்தும் கூட
உன் நினைவுகளை தான்
அனுதினமும் நான்
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
இன்னமும் எனக்குள்
என் சுவாசமாய் நீ வாழ்கிறாய்
இறக்கவும் கூட முடியாமல்
உன் நினைவுகளுடன்
இன்னமும் நானும் கூட
வாழ்கிறேன்
உன் நினைவுகளால்
மட்டுமே தான் வாழ்கிறேன்
விழுவதும் பின்பு எழுவதும்
அலைகளின் இயல்பாய்
இருக்கலாம், மனிதனுக்கோ
விழும்போது பெறும் காயங்களின்
வலிகள், எப்போதும் எழும்போது
கிடைக்கும் பரிசுகளால்
குணமாகிவிடுவதில்லை...
இப்போது எனக்கொன்றும்
பரிசுகள் தேவையில்லை,
மிக குறைந்த அளவு
நான் பெற்ற தோல்வியின்
காயங்களில் இருந்தவாது மீள
வழி தெரிந்தால் பரவாயில்லை
இந்நாளில் என்னை போன்ற சிலருக்கு
விழுவதே வாடிக்கையாகி விட்டது
வெற்றி என்பதை பிறர் பெறும்
போது மட்டுமே பார்த்து பழகிவிட்டது
தோல்வி என்ற வார்த்தையே வாழ்க்கை
முழுவதும் சூழ்ந்து கிடக்கிறது
வெற்றிகாண பெரும் முயற்சியே
தோல்வியில் முடியும் போது
பின்பு எங்கிருந்து நான் எழுவது???
நான் இதை ஒப்புக்கொண்டே
ஆகவேண்டும் "ஒவ்வொருமுறையும்
தோல்வியுடன் சண்டையிட்டு
தோற்றுப் போகிறேன்"
இதில் சோகம்
என்னவென்றால், எனக்கு மட்டும்
அடுத்த படியில், அடுத்த நொடியில்
வெற்றி என்ற நிலையில்
தோல்வி கிடைப்பது தான்
நல்லவேளையாக "உயிர்" என்ற
விஷயத்தில், என்
தொடர் தோல்வியின் விளையாட்டு
நடைபெறவில்லை ..
நடந்திருந்தால் அடுத்த நொடி
காப்பற்றப்படுவேன் என்ற நிலையில்
இந்த நொடியே இறந்திருப்பேன்
இது தான் என் வாழ்க்கை சாபமோ
தெரியவில்லை..இருந்தும்
என்றைக்காவது வெற்றியை
காண்பேன் என்ற சிறு
நம்பிக்கையுடன் தொடர்கிறேன்
இல்லையில்லை நத்தையைப்போல்
நகர்த்திக்கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையை....
நான் ஒவ்வொரு முறை
நம் கல்லூரியை
கடக்கும் போதும்
நாம் ஒன்றாய் படித்த
நான்கு வருட கால
நினைவுகளின் தொகுப்பாய்
ஓர் திரைப்படமே
என் கண்களில் ஓடுகின்றது
அதில் உன் பாடல்கள்
இல்லையில்லை உன்
வார்த்தைகளும் கூட
மெல்லிசையாய் கேட்கிறது...
உன் நினைவுகளே
எனக்கு தெரிந்த வரையில்
சிறந்த இயக்குனராகும்
காரணம்
என் நான்கு வருட வாழ்கையை
நான்கே நிமிட நேரத்தில்
ஒரு அற்புத கலைப்படைப்பாய்
நான் காண தருவதற்கு
உன் அழகிய நினைவுகளாலன்றி
வேறேவற்றால் கூடும்???
நாம் தேடிய பொருள்
கிடைக்கப்பெறும் போது
நம் தேடல் முடிவடைகிறது
காதலுடன்
நம்மை நாடிய மனம்
எங்கோ தொலையும் போது
தான் நம் வாழ்க்கைத்தேடலே
ஆரம்பமாகிறது
உன் வருகைக்காக
மணிக்கணக்காய் காத்திருந்தேன்
நீ வருவதாய் தெரியவில்லை
உனக்காய் கொண்டு வந்த
பூக்களும் கூட உன்னை
சேராமலே வாடிப்போனது
ஆனால்
இன்னமும் என் மனம் மட்டும்
நீ கண்டிப்பாய் வந்து விடுவாய்
என நம்பிக்கையுடன் எங்கோ
தேடிச்சென்றது
நான் எனது நாட்குறிப்பிலும் கூட
முன் பக்கத்தில் மட்டும்
என் பெயரை எழுதிவிட்டு
எல்லா பக்கங்களிலும்
உன் பெயரை நிறைத்தேன்
ஆனால் நீயோ
உன் பெயரின் கடைசியில்
என் பேரை சேர்க்க
இவ்வளவாய் யோசிக்கிறாயே??
என் எண்ணமெல்லாம் உன்னை
மட்டுமே நிறைத்திருந்தேன்
ஆனால் இன்றளவும் நீ
என்னை உன் கண்ணளவில்
நிறுத்திவிட்டு மனமிறங்க
மறுக்கிறாயே??
இது உனக்கே நியாயமாகுமோ??
ஒன்று மட்டும் உண்மையடி
நம்மிருவரில் காதலை தூக்கி
சுமப்பதிலும் கண்போல்
காப்பதிலும் உன்னை விடவும்
நானே சிறந்தவன்
இதற்காகவாது என்னை
நேசிப்பாயா ??
காத்திருக்கிறேன் காதலுடன்...
இவ்வுலகில்
இன்னமும் கூட சில
தவறுகள் நடந்துகொண்டு
தான் இருக்கிறது..
உதாரணமாய்
உன் பிறப்பிற்கு பிறகாவது
அச்சிடப்பட்ட எல்லா மொழி
அகராதியிலும் அழகின் பொருள்
நீயென மாற்றி இருக்கலாம்
ஒருவேளை தவறுகள்
திருத்தப்படுமேயானால்
முதலில் மாற்றப்பட
வேண்டிய திருத்தம்
இது தான் என்பேன்....
நீ உண்மையில்
இயற்கையின் இயல்பையும்
கூட மாற்றத் தெரிந்தவளடி
பூமிக்கு வர பிடிக்காமல்
அடமாய் மறுத்த மழையும்
நீ நினைக்கவே, உடனே
உலகை நனைக்கிறதே!!!
பெரும்பாலும் எல்லாருக்கும்
தான் பொழுது விடிகிறது
அது இனிதாகவும் பிறக்கிறது
ஆனால் எனக்கு மட்டும்
இனிமையான விடியல்
வெறும் கனவாகவே
தெரிகிறது