Friday, September 21, 2012

குற்றவாளி












தோழியே !!! நீ ஏனடி என் 
சிறு பிழைகளையும் 
திருத்துவதாய் சொல்லிக்
கொண்டு, என் அருகிலேயே 
இருந்து பழக்கப்படுதினாய்??

உன் நோக்கம் என்னவோ 

நான் திருந்துவதாய் 
இருக்கலாம், ஆனால்  
எனக்கோ உன் அருகாமை 
தான் தெளிவாய் புரிந்தது 
பெரிதாய் தெரிந்தது 

இன்றோ 

நீ என்னுடன் இல்லாத போது
என்  பிழைகள் அதிகமானது 
என் மனமோ, 
ருசி கண்ட பூனையாய் 
பிழைகள் செய்தால் தான் 
அதை திருத்த நீ வருவாயென
என்னை தூண்டியது 

இப்படியே 

என் பிழைகள் சேர்ந்து 
இப்போது பெரும் 
குற்றங்களும் ஆகிவிட்டது

"எப்போதும் என் மன 

மாற்றங்களுக்கு காரணம் 
நீ தான்" என்பேன்.
அதையே இன்றும் 
அழுத்தமாய் கூறுகிறேன் 

இந்நாளில் என் குற்றங்களின்

தண்டனைக்காக
குற்றவாளிக்கூண்டில் நான் 
நிறுத்தப்பட்டிருக்றேன்

இப்போதும் என் நினைவில் 

உன் பிரிவு மட்டுமே பெரிதாய் 
அழுத்திக்கொண்டிருக்கிறது 
இது அத்தனையும் நடந்தது
என்னவோ உன் வருகையை
எதிர்பாத்து தான்
உன் பிரிவின் துயரத்தால் தான்

இப்போதாவது வா !!!


என் தண்டனையை 

நீ ஏற்பதற்காக அல்ல 
அதை குறைப்பதற்காக அல்ல 
எனக்காக வாதாடுவதற்கும் அல்ல 
வந்து முடிந்தவரை என்னையல்ல
என் கடைசி நேர நம்பிக்கையைவாது
எப்படியாவது காப்பாற்று.

ஒருவேளை உன்னைக்
காணாமலே 
என் தண்டனையை எற்பேனேயானால் 
என் ஆவியும் கூட பின் நாளில் 
இதே கூண்டில் குற்றம் சுமத்தப்பட்டு 
உன் வருகைக்காய் காத்து நிற்கும் 

இதுவரை மாறுதலையும் 

மன்னிப்பையையும் தந்தவள் 
இப்போது தண்டனைகளையும் 
தருகிறாள் என்று  சந்தோசமாய் 
ஏற்றுக்கொள்கிறேன் என் 
தண்டனையை 

மற்றவருக்கு தெரியாது 

இது எதோ நீ பெயருக்கு தரும் 
குறைந்த பட்ச தண்டனை என்றும் 
முன்பே நீ எனக்கு முன்பே 
தந்துவிட்ட "பிரிவு" என்ற 
மரண தண்டனையை பற்றியும்.

No comments:

Post a Comment