விழுவதும் பின்பு எழுவதும்
அலைகளின் இயல்பாய்
இருக்கலாம், மனிதனுக்கோ
விழும்போது பெறும் காயங்களின்
வலிகள், எப்போதும் எழும்போது
கிடைக்கும் பரிசுகளால்
குணமாகிவிடுவதில்லை...
இப்போது எனக்கொன்றும்
பரிசுகள் தேவையில்லை,
மிக குறைந்த அளவு
நான் பெற்ற தோல்வியின்
காயங்களில் இருந்தவாது மீள
வழி தெரிந்தால் பரவாயில்லை
இந்நாளில் என்னை போன்ற சிலருக்கு
விழுவதே வாடிக்கையாகி விட்டது
வெற்றி என்பதை பிறர் பெறும்
போது மட்டுமே பார்த்து பழகிவிட்டது
தோல்வி என்ற வார்த்தையே வாழ்க்கை
முழுவதும் சூழ்ந்து கிடக்கிறது
வெற்றிகாண பெரும் முயற்சியே
தோல்வியில் முடியும் போது
பின்பு எங்கிருந்து நான் எழுவது???
நான் இதை ஒப்புக்கொண்டே
ஆகவேண்டும் "ஒவ்வொருமுறையும்
தோல்வியுடன் சண்டையிட்டு
தோற்றுப் போகிறேன்"
இதில் சோகம்
என்னவென்றால், எனக்கு மட்டும்
அடுத்த படியில், அடுத்த நொடியில்
வெற்றி என்ற நிலையில்
தோல்வி கிடைப்பது தான்
நல்லவேளையாக "உயிர்" என்ற
விஷயத்தில், என்
தொடர் தோல்வியின் விளையாட்டு
நடைபெறவில்லை ..
நடந்திருந்தால் அடுத்த நொடி
காப்பற்றப்படுவேன் என்ற நிலையில்
இந்த நொடியே இறந்திருப்பேன்
இது தான் என் வாழ்க்கை சாபமோ
தெரியவில்லை..இருந்தும்
என்றைக்காவது வெற்றியை
காண்பேன் என்ற சிறு
நம்பிக்கையுடன் தொடர்கிறேன்
இல்லையில்லை நத்தையைப்போல்
நகர்த்திக்கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையை....
No comments:
Post a Comment