Sunday, September 30, 2012

தூறலாய் வா











போடி உனக்கு மழை 
எவ்வளவோ பரவாயில்லை 
மழை எதிர்பாரா நேரத்தில் 
சிறு சாரலாகவாவது வந்து
வறண்டு கிடக்கும் நிலத்தை
நனைத்துவிட்டு செல்கிறது

ஆனால் நீயோ 
பல நாட்களாய் உன் காதலை 
எதிர்பார்த்து இருண்டு போன
என் கனவுகளுக்கு 
புன்னகை எனும் ஒளியேற்றி
வறண்டு போன வாழ்க்கைக்கு
சிறு தூறலாய் நீரூற்றி செல்ல 
இன்னமும் மறந்து கொண்டே 
மறுத்துக் கொண்டே இருக்கிறாய்  

No comments:

Post a Comment