வானம்
நீ, என் உலகத்தின்
தொடக்கம் முதல்
கண்ணுக்கெட்டிய தூரம்
வரை முழுவதுமாய்
பரவி இருக்கும் வானம்
எங்கோ தூரத்தில்
பூமியும் வானமுமாகிய
நாம் இணைவதாய் ஒரு
நம்பிக்கை
அதே நம்பிக்கையில்
அந்த இணைப்புபுள்ளியை
நம் வாழ்கையின்
தொடக்கப்புள்ளியை
அடைந்து விடும்
பயணத்தில் நம் காதல்
No comments:
Post a Comment