நிசப்தம்
சத்தமிடாதே!!!
அழகாய், மௌனமாய் நீ
காட்டிய சமிக்ஞையால்
உன்னைக்கண்ட ஆனந்தத்தில்
துள்ளிக்குதித்துக்கொண்டிருந்த
என் இதயமும்
ஆர்ப்பாட்டமில்லாமல்
அமைதியாய் துடித்தது
ஏன், என்னை சுற்றி
இயங்கிக்கொண்டிருந்த
முழு உலகமும் தான்
இன்று நிசப்தம் என்ற
வார்த்தையின் பொருளை
உன்னால் தான், நான்
உணர்ந்துகொண்டேன்
No comments:
Post a Comment