Thursday, September 27, 2012

கவிதை அஞ்சலி
















இழப்போ, இறப்போ 
இவை இரண்டும்  
வார்த்தை வடிவிலேயே 
மிகக்கொடுமை தான் 
நம் வாழ்க்கை வழியில் 
வந்தால் ???

நம் பாசமிகு உறவுகளின் 
இறப்பு, நம் வாழ்வின் 
மிகப்பெரிய ஈடுசெய்ய
முடியா  இழப்பு

 இறந்து போனவனுக்கு தான் 
அது வெறும் இறப்பு
அவன் உறவுகளுக்கோ அது 
தான் பெரும் இழப்பு  

இறப்பே இல்லா இறைவன் 
அதை நமக்கேன் தந்திட்டான்?
தனக்கே இல்லாவிட்டாலும் தன் 
படைப்புகளாவது பெறட்டும் 
என்ற நல்  எண்ணமோ ??
ஒருவகையில் இறப்பு என்று 
ஒன்றிருப்பதால் தான் மனிதம் 
இன்னமும் மதிக்கபடுகிறது  


உண்மை தான் 
ஆனால் இறப்பை தந்த 
இறைவன் ஏனோ அதை மறக்க,
ஏற்க மனதை தராதது தான் 
வருத்தம்
மறதி என்ற ஒன்றை தர 
தேவையான நேரத்தில் தர 
ஏனோ சில சமயங்களிம் 
மட்டும் இறைவன் 
மறந்துவிடுகிறார் 
 
உறவுகளின் பெருமை 
அதை இழந்தால் தான் 
தெரியுமென்றால் 
அதை நான் தெரிந்து 
கொள்ளவே விரும்பவில்லை 
என் இறப்பு வரையிலும் கூட

நிரந்தரமாய் என்னை விட்டும் 
இந்த மண்ணை விட்டும் 
பிரிந்து போன 
என் சில பாச, நேச  உறவுகளுக்கு
எனக்கு தெரிந்த விதத்தில் ஒரு  
கண்ணீர் அஞ்சலி இலையில்லை 
கவிதை அஞ்சலி  

No comments:

Post a Comment