Friday, September 28, 2012

மறுபிறவி













நீ என்னை தூக்கி 
எறிந்து விட்டு சென்ற பின் 
சொல்லமுடியா தனிமையில்
நான்மட்டும் தவிக்கையில்  
கதை ஒன்று  நினைவில் வந்தது

எறும்பொன்றை விளையாட்டுச்
சிறுவன் காலால் மிதித்துக்கொல்ல
மறுபிறவியில்
எறும்பு அந்த சிறுவனாகவும்
சிறுவனாகவும் பிறக்க
எறும்பு பழிவாங்கியாதாம்


இது வெறும் கற்பனை கதையாகவே
இருக்கட்டுமே, இப்படி உண்மையாய்
நடக்குமானால்
மறுபிறவியில்
நான் நீயாகாவும்
நீ நானாகவும் பிறந்திட, 

நீ காதலித்திட நான் மறுத்து
உன்னை மறந்து
உன்னை பிரிந்து சென்றிட வேண்டும்


நீ நானானதால் அப்போது
ஒருவேளை, உனக்கு என் வலியும்,
துயரும், வேதனையும் புரியும்
அந்த நாளிலும் கூட உன்னைபோல்
கல்நெஞ்சம் உடையவளாய் நான்
பிறந்திடமாட்டேன், இருந்திட
மாட்டேன் 

காரணம்  
நீ ஏற்படுத்திய ரணம் ஏழேழு 
ஜென்மங்களும் மறக்காது என்பதால்
இந்தப்பிறவியில் அல்ல வேறு 
எந்தப்பிறவியிலும் உன்னை
காயப்படுத்த விரும்பவில்லை நான்

இப்படி பழிவாங்குவது கட்டாயம்
என்ற நிலை வந்தால்
இனி எனக்கொரு புது பிறவியே
தேவையில்லை என்று
இறைவனிடம் மன்றாடி
உன் நினைவுகளுடனும்
உன் சந்தோசத்திலும்
உயிர் வாழ்வேன் ...

No comments:

Post a Comment