
பூக்களே தங்களை
பறித்துவிடும் படி
உன்னை கெஞ்சுவதால்
உனக்கு மட்டும்
"பூக்களை பறிக்காதீர்"
என்பதற்கு விதிவிலக்கு
சரி பூக்கள் ஏன் இவ்வாறு
உன்னிடம் மன்றாடுகிறது ??
ஒருவேளை
நாட்கணக்கில் செடியில்
இருந்து என்றோ ஒரு நாள்
வாடுவதை விட
நொடி பொழுது உன் கையில்
இருந்த சந்தோஷத்தில்
மடிவதே மேல் என்ற
நினைப்பில் தானோ??
No comments:
Post a Comment