என்னவளே!!!
என்றுமே நம் வீடு
கண்ணாடி முன்
நில்லாதே
உன்னை சில நொடிகள்
பிரதிபளிக்கும் இன்பத்தில்
அது நாள் முழுவதும்
மூழ்கிக்கிடக்கிறது
அந்த சில நொடியில்
அது நீயாய் ஆகிவிடுவதாய்
எண்ணிக்கொண்டு தன்
இயல்பையும் குணத்தையும்
மறந்து நிற்கிறது
உன்னை சரியாய்
பிரதிபளித்த பின்னர்
எவர் வரினும் அது
அவர்கள் சிரிக்கும் போது
அழுவதாயும்
அழும் போது சிரிப்பதகாவும்
மாற்றிக்காட்டுகிறது
உன் வீட்டு கண்ணாடிக்கு
பேய் பிடித்ததென
சில மூடர்கள் சொல்கிறார்கள்
ஆனால் அதற்கும் கூட
உன் அழகை பிடித்த
விஷயம் நான் மட்டுமே
No comments:
Post a Comment