Monday, September 17, 2012

பிரியமான தோழிக்கு..












ஏனோ நீ விலகிச் 
சென்ற நொடியிலேயே 
என் கவிதை திறனும் 
என்னை விட்டு நீங்கிச் 
சென்றது ..

என் சிந்தனையில் 
பிறந்த பல கவிதைகளும் 
என் தோழியாய்  
நீ வந்த பிறகே பெரிதும் 
வெளிப்பட்டது..
இன்றோ உன்னுடனே  
அது மறைந்தும்விட்டது 

என்னைக்காட்டிலும் 
அது தான் உனக்கு 
உண்மையான தோழனாய்
இருந்தது போலும் 

என் கவிதைகளே
கூட இன்று எனக்காக
என்னுடன் இல்லாமல் 
போனது தான் 
என் இன்றைய நிலைமை 

மொத்தத்தில் நீயும் இல்லை 
என் கவிதைகளும் இல்லை 
நம் நட்பும் இல்லை
என் வாழ்வில் இனி
அர்த்தமும் இல்லை 

நீ வேண்டுமானால் என்னை 
விட்டுச் சென்றிருக்கலாம் 
ஆனால் உன் நட்பை 
என்றுமே விட விரும்பாதவன் 
நான் 

இப்போதும் கூட உன் 
பிரிவை விட, இனி 
உனக்கு ஆறுதலாய் 
என்றும் உன் நண்பனாய்  
நான் இல்லமால் போனாலும் 
என் கவிதைகளாவது இருக்கும் 
என்பதை எண்ணி என்னை நானே 
தேற்றிக்கொள்கிறேன்

No comments:

Post a Comment