புன்னகை தேசத்து
இளவரசியே
உன் முகவரி
ஆம் உன் முக-வரி
தேடித்தானோ இத்தனை
வண்ணத்துப்பூச்சிகள்
சிறகடித்து
அலைந்திருக்கின்றன???
ஒருவேளை உன் புன்னகை
கொண்டே உயிர் வாழ
நினைத்திருக்கும் போலும்
அவைகளுக்காக
உதிர்த்துவிடு உன் புன்னகையை
உனக்கும் கூட தெரியாமல்
அவைகளோடு நானும்
கொஞ்சம் வாழ்ந்து விட்டு
போகிறேன்
தூரத்தில் நின்று
உன் புன்னகையின் அழகை
ரசித்துக்கொண்டே
No comments:
Post a Comment