
காதலிலும் கூட
எதிர்ப்பார்ப்பு என்ற ஒன்று
ஏதோ ஒரு புள்ளியில்
ஏதோ ஒரு வகையில்
இருக்கத்தான் செய்கிறது
எதிர்பார்ப்பு இல்லாத ஒரே
உறவு 'நட்பு' தான் என்றேன்
இதையே முழு மனதாய்
நம்பினேன்
நம்பிக்கையின் மறுபெயரே
நட்பு என்பது இந்நாளில்
மாறிப்போய்
நண்பனின் நம்பிக்கையை
உடைத் தெரிவதே நட்பு
என்றாகிவிட்டது போலும்
என் நம்பிக்கையை
உடைத்திடவும்
நண்பன் என்ற பெயரில்
நட்பு என்ற போர்வையில்
தன்நலம் மட்டும் காணும்
தன் தேவைகளுக்காகவே
வாழும் சில பதர்களும்
உண்டென்று அண்மையில்
தான் உணர்ந்துகொண்டேன்
எனக்கோ என் நண்பனின்
வார்த்தையே உலகம்
அவனுக்கோ உலகத்தின்
வார்த்தைகளே கடவுள்
நானோ அவன் தோழமையை
வேண்டிநின்றேன்.அவனோ என்
நட்பை பொழுதுபோக்காய்
எண்ணியவன் என்னை
காயப்படுதிருந்தாலும் கூட
ஏற்றுக்கொள்வேன்,
பொறுத்துக்கொள்வேன்
எம் நட்பை கேவலப்படுத்திய
ஈனப்பிரவியவன்.
உறவுகளுக்கு தான்தான்
இலக்கணம் எழுதியதாய்
அவனுக்கோர் நினைப்பு
அடிக்கடி போலி உறவாய்
சித்தரிக்கிறான் என் நட்பை
உண்மை தான்
கண் தெரியாதவன் யானையை
பற்றி விவரிக்கிறான்
என்னை பிரிந்து விட்ட
சுத்தமாய் மறந்த விட்டவன்
சொல்லிக்கொள்கிறான்
அவன் மேல் தவறில்லையென
உண்மை தான்
எதிர்பார்ப்பு என்றொன்று
நட்பில் இல்லை என்று நம்பும்
நானே அவன் அன்பையும்
தோழமையும்,
அவனிடம் உண்மையும்,
நட்பில் நேர்மையும்
எதிர்பார்த்தது, எதிர்பார்ப்பற்றது
நட்பென நம்பியது, எல்லாமே
அவன் சொல்வது போலே
என் தவறுதான்
நண்பனிடம் நட்பை தவிர
மற்றதனைத்தையும் எதிர்பார்க்கும்
நட்பின் பொருளறியா மூடனை
நண்பனாக்கி அழகு பார்த்தது
நான் செய்த மன்னிக்கபடமுடியாத
பெரும் குற்றம்தான்
ஒப்புக்கொள்கிறேன் இப்போது
என்ன செய்வது
பழகப் பழக தானே பாலும்
புளிக்கிறது, சில நட்பின் குணம்
தெளிவாய் தெரிகிறது
புளித்த பாலாய் நட்பு
மாறினாலும் அதுவும் ஒரு
சுவையாய் பருகிட துணிந்தேன்.
இன்றோ அது உயிர் எடுக்கும்
நஞ்சாய் மாறிப்போனது
சிலர் சொல்லுவார்கள்
காலப்போக்கில் நண்பர்கள்
குறைந்து போவார்களாம்
நான் சொல்வேன்
உண்மையற்ற நண்பர்கள் தான்
தொலைந்து உண்மையான
நண்பர்களால் வாழ்க்கையில்
நிம்மதியும், சந்தோசமும்
நிறைந்து போகுமென்று
நான் பழகியதில்
இப்படி தொலைந்து
போக வேண்டிய நண்பன்
இல்லையில்லை மனிதன்
அதுவும் இல்லை
எப்படி சொல்ல அவனை??
முடிந்த வரை
பொறுத்தும் விட்டேன்
நண்பர்கள் பட்டியலிலிருந்து
நீக்கியும்விட்டேன்
இன்னமும் பார்பவரிடம் எல்லாம்
புகார்செய்து கொண்டுதான்
இருக்கிறான் என்னை
நானோ
இன்னும் அமைதியா ய் தான்
இருக்கிறேன், காரணம் என்றும்
ஆதவன் புகழ் மங்கி
விடுவதில்லை நன்றிகெட்ட
நாய் அதை பார்த்து
குரைப்பதினால்
பாவம் அது வாய் வலிக்க
குறைத்துக்கொண்டே இருக்கட்டும்
சூரியனாய் நான் தினமும்
உதித்துக்கொண்டே இருக்கிறேன்
என் வழியில்...
( கண்டிப்பாய் துரோகிகளுக்கு மட்டும் )
No comments:
Post a Comment