Tuesday, November 13, 2012

பிரார்த்தனை












கடவுளுக்கு கண்கள் 
இருக்கிறதா எனக்குள்ளேயே 
கேட்டுக்கொண்டிருந்தேன் 
என் கஷ்டங்கள் தீர 
கடவுள் கண்திறப்பாரா 
புலம்பிக்கொண்டிருந்தேன்

அவளுக்கே தெரியாமல் 
என் கேள்விக்கான விடையை 
என்னவள் எனக்கு 
உணர்த்தினாள் 

அழகாய் கண்மூடி 
இரு கை கூப்பி 
மெதுவாய் முணுமுணுத்து 
மெலிதாய் அவள் 
வேண்டிக்கொள்கையில்
அந்த கடவுளும் அந்த 
ஒரு நொடி கண்திறக்கிறார்

அவள் பிராத்தனையில் 
என் வேண்டுதல்
நிறைவேறுகிறது 
அவள் வேண்டுதலால் 
என் கஷ்டம் தீர்கிறது .. 

No comments:

Post a Comment