உன் ஒருவளை படைக்கவே
தன்னிடம் உள்ள
மொத்த கற்பனைகளையும்
உபயோகித்து விட்டதாகவும்,
உலகில் யாருக்குமே தராத
அழகையும் அறிவையும்
உனக்கு மட்டுமே தந்து
விட்டதாகவும்
உலக மகளிர் யாவரும்
பிரம்மன்மேலேயே வழக்கு
தொடர்ந்துவிட்டனராம்
புது பிரச்சனையாய்
தேவகண்ணிகயரையும்
"இது ஓர வஞ்சனையென"
போராட்டத்தில்
இறங்கியுள்ளனராம்
யாரோ எப்படியோ
போகட்டும்.எனக்கென்ன ???
எனக்காகவே படைக்கப்பட்டு
நீ எனக்கே எனக்காய்
இவ்வுலகில் இருக்கும் வரை
எனக்கு என்ன கவலை??
No comments:
Post a Comment