Saturday, December 7, 2013

வருகையின் நிழல்













உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன், அனுதினமும்
தவறாமல் உன்னையே  
நினைத்து மட்டுமே
வாழ்கிறேன், ஏனோ
இறக்க முடியாமல் கூட
இன்னமும் இருக்கிறேன் 
நீ என்னை விட்டுச்சென்ற
நீ எனக்காய் விட்டுசென்ற
இவ்வுலகில்
எதுவுமே அழகில்லை என்றோ,
எதுவுமில்லை என்றோ சொல்ல
வழியில்லை என்றாலும்
நீ இல்லை என்பதால்
நீ எனக்கில்லை என்பதால் 
இவற்றை எல்லாம்
சொல்லிக்கொண்டு தான்
இருக்கிறேன், போதுமடி
மற்றதெல்லாம் தேவையில்லை
நீ மாத்திரம் போதுமெனக்கு
வந்துவிடு

தூரமாய் தெரிகிறது
உன் வருகையின் நிழல்
நிஜமாகுமா .

Friday, December 6, 2013

அநாதை

















என் சொந்தங்கள் எல்லாம்
மறைந்து போக,
என்னவளோ என்னை
மறந்து போக
என் சொந்தங்களால் நானும்
என்னவளால் என் காதலும்
ஆதரவற்ற அநாதையாக

Thursday, November 28, 2013

துரதிர்ஷ்டம்












நான் பிறந்தது முதல் இந்நாள்
வரை எதையும் அதிகமாய்
விரும்பியதில்லை,
அப்படியே விரும்பினாலும்,
அது கிடைத்ததில்லை,
ஒருவேளை கிடைத்தாலும்
கூட நிரந்திரமாய் அது
என்னுடன் இருந்ததில்லை
இப்படி தோல்விகளையும்
ஏமாற்றங்களையும் சுமந்த
நான் தான் உலகின் மிகப்பெரிய
துரதிர்ஷ்டசாலி

இல்லையில்லை
"துரதிர்ஷ்டம்" என்ற
வார்த்தைக்கும் கூட பாதிக்கு மேல்
அதிர்ஷ்டம் இணைந்துகொள்கிறது
எனக்கோ என் வாழ்க்கையின்
பாதிக்கு மேல் கடந்த பிறகும்
இன்னமும் கிடைக்கவில்லை
வீணாய்ப்போன அந்த அதிர்ஷ்டம்

ஏமாற்றம்













மாற்றம் ஒன்றே மாறாதது
என்றால், என்னவளே!!
தினந்தோறும் எண்ணங்களிலும்
மனதளவிலும் மாறிக்கொண்டே
இருக்கும் நீ
எனக்கு கிடைத்த மிகப்பெரிய
ஏமாற்றம் தான்   

காயம்

















பிரிவில் சின்னது,
பெரியது என்ற
வேறுபாடில்லை
அவர் இவர் என்ற
பாகுபாடும் இல்லை
எல்லா பிரிவுமே வலிக்கும்
என்றாலும் நீ தந்து விட்டு
போனதால் இன்னமும்
வலிக்கிறது

இந்த வலி உயிர் பறிக்கும்
கொடுமை தான்

சந்தோஷத்திலும் கூட
காயங்கள் இன்றி வலி தரும்
சோகத்திலும் கூட
வலிக்காத காயம் தரும்
காதல் ஒரு விந்தை தான் 

Wednesday, November 27, 2013

விலகிச்சென்றவள்

















தோழியே, என் வாழ்வில்
உன் வருகையும், பிரிவும்
சில இல்லை பல
மாற்றங்கள் உண்டு
பண்ணியது என்னவோ
உண்மைதான்

நீ கற்றுதந்ததும்
எனக்கு பெற்றுத்தந்ததும்
என் நினைவில்
பத்திரமாய் இருக்கிறது

ஆனாலும் ஒருவரை
உண்மையாய் நேசிப்பதை
கற்று தந்த விதத்தில் உன்
பங்கோ ஒன்றுமே இல்லை

பிறப்பிலயே என்னுடன்
பிறந்ததிந்த நேசம், ஆம்
பிறந்த நொடியிலிருந்தே
தாயை நேசித்தேனே
அவள் மட்டும் என்ன??
என்னை சுமக்கும் போதே
நேசிக்க ஆரம்பித்துவிட்டாள்
அவளிடம் கற்ற இந்த பாடம்
சாகும் பொழுதிலும் மறக்காது

இதை அறியாமலே,
என் நேசத்தை உரிமை
கொண்டாடுகிறாய், இதை
நீ தான் கற்றுத்தந்ததாய்
சொல்லிக்கொள்கிறாய்
உன்னை மறக்கும் படி
கட்டளையிடுகிறாய்

உண்மையான நேசம்
இல்லாதவளே, அது என்ன
என்பது கூட அறியாதவளே
அதை நீ ஏற்றுக்கொள்ள
போவதும் இல்லை 
உன் மேல் நான் கொண்ட
நேசம் தான் என்றாலும்
நீயே சொன்னாலும்
அதை மாற்றிக்கொள்வதாய்
இல்லை என்றும்
என்றென்றும் 

அழகி












பெரும்பாலும் நிலவுடனே
தங்கள் காதலியை
ஒப்பிடும் உலக காதலர்களே
சில கவிஞர்களே,
நீங்கள் என்னவளை
பார்த்ததில்லை அதனால்
தான் உங்களுக்கு
தோன்றவில்லை

அந்த நிலவை காட்டிலுமே
அழகிய ஒன்று அந்த வானில்
அல்ல நம் பூமியிலேயே 
உள்ளது என்று

அவளை கண்டால் நான்
சொல்லவதை அவர்கள்
மறுக்கப்போவதில்லை
ஆனால் அவர்களுக்கு இது
தெரியபோவதே இல்லை

அவர்கள் அந்த நிலவையே
புகழ்த்து தள்ளட்டும்
நான் அதை விட
அழகிய என்னவளுடன்
வாழ்ந்து கொள்கிறேன்

என்னவளை புகழ்ந்து எழுதி
ஒரு கவிஞனாய்
அவளுடன் வாழ்ந்து ஒரு
காதலனாய் 

தொடரும்














என்னை விட்டு விலகி சென்ற
அவளை நினைக்கவே
கூடாது என்று நினைத்தபடி 
தான் ஒவ்வொரு காலையும்
எழுகிறேன்

இப்படி நினைத்த மாத்திரத்தில்
என் மனம் "எவளை" என்று வினவ
"என்னவளை" தான் என உடனே
நினைத்து விடுகிறேன் அவளை

இது ஒரு நாளில் சில முறை அல்ல
பல முறை நிகழ்கிறது
நின்னைக்க கூடாதென்றே 
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும் 
ஒவ்வொரு நாளும் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அவள் நினைவுகளுடன் 

என்னை மறக்க நினைக்கும்,
நினைக்க மறுக்கும்  அவளை
நான் ஏனோ மறக்க மறக்கிறேன்
உண்மையில் மறக்க மறுக்கிறேன் 

இப்போது தோன்றுகிறது ஒருவேளை
அவள் நினைவுகள் இருப்பதால் தான்
என் நாட்கள், என் வாழ்க்கை இவ்வளவு 
இனிமையாய் தொடர்கிறதோ??
மனம் சிரித்து விட்டு சொன்னது
உன் நாட்களோ உன் வாழ்க்கையோ
மட்டும் உன் உயிரும் கூட உன் உடலில்
அவள் நினைவுகலாலயே தொடர்கிறது

உண்மை புரிந்தாலும் என் செய்ய??
நாளை காலையும் அவள் நினைவுகளை
மறக்க நினைப்பேன்

இது தொடரும்....

Monday, November 25, 2013

தனிமை













நான் ஓர் தனிமை விரும்பி

தனிமையை ரசித்தேன்

தனிமையை நேசித்தேன்
தனிமயிலேயே வசித்தேன்
நீ என் வாழ்வில் வரும்வரை

உன்னால் 
எனக்கும் என் தனிமைக்கும்
மத்தியில் சிறு விரிசல்
முதலில் அதை மறந்து போனேன்
சிலநாளில் என் தனிமையை
முழுவதுமாய் இழந்தே போனேன்

அது ஏனோ காதல் ஒன்றை
இழக்க செய்தே தன்னை அணைக்க 
செய்கிறது. பெரும்பாலும் அது
நட்பாய் தான் இருக்கிறது
என் வாழ்விலோ நான் நேசித்த
தனிமையாய் அமைந்தது 

காலப்போக்கில் உனக்கும்
எனக்கும் சிறு ஊடல் வந்திட 
நேரம் பாத்திருந்த தனிமை
இப்போது ஆகிவிட்டது
உன் உடமை

என்னை உன்னிடம் பேசவும்
திரும்பவும் நாம் சேர
என்னமாய் தடுக்கிறது

நான் உன் காதலை பெற
என் தனிமையை இழந்தேன்
நீயோ என்னை மறக்க
என்னை தவிர்க்க தனிமை
நாடுகிறாய், உபயோக்கிறாய் 

உண்மையாய் நேசித்ததும் கூட
சில வஞ்சிக்கும் என்பதற்கு
நீயும், என் தனிமையுமே
சிறந்த எடுத்துகாட்டு

இப்போது காத்திருக்க
முடிவெடுத்திருக்கிறேன் 

எது முதலில் எனக்கு திரும்ப
கிடைக்கிறதோ அதை
எற்றுக்கொள்ள போகிறேன்
முழு மனதுடன்

அது  நீ ஆனாலும் சரி 
அல்லது என்
தனிமையானாலும் சரி  

நடிப்பு












ஒரு காலத்தில்,
உன் காதலை
கவிதையாய் பார்த்தவன்
நான், அது என்னை
கவிஞனாக்கியது

என் கவிதையை எல்லாம்
வெறும் கட்டுக்கதையாய்
படித்தவள் நீ
அது உன்னை மிகபெரிய
நடிகை ஆக்கியது

ஓர் அழகிய கவிதையாய் 
என் வாழ்க்கையில்
உன்னை வர்ணித்தேன்
நீயோ ஒரு காதலியாய்
என் வாழ்க்கையில்
கச்சிதமாய் நடித்தாய்

இந்நாளில் எனக்கு 
நீ விலகிச்சென்ற போதும்
வாழ்க்கை அழகிய
கவிதை தொகுப்பாய் திரும்ப
கிடைத்தது

ஆனால் உனக்கு??? 
கவிதை காதல் என
எல்லாத்தையும் தொலைத்து
விட்ட ஏக்கம் மட்டுமே
நிலைத்தது 

இனி அழுதென்ன லாபம்,
எதற்கிந்த சோகம்
மறுபிறவி என்ற ஒன்றிருந்தால்
முயன்றுபார் உண்மை காதலை 

விரும்புகிறேன்

















என்னை
தூக்கி எரிந்து விட்டு
சென்ற உன்னை
மறக்கும் படி மூளை
கட்டளையிட,மனமோ
மன்னித்துவிடும்படி
மன்றாடியது

உன் பேச்சை மட்டுமே
கேட்டு நடந்தவன் நான்
இப்போது
புரியாமல் தவிக்கிறேன்
எதன் பேச்சை கேட்பது
என்று தெரியாமல்

கடைசியாய் ஒரு முடிவு
மனதின் வார்த்தைகளை
கேட்பதென்று..

காரணம் நீ குடியிருந்து
விட்டு சென்ற இடம்
வெகு காலமாய் உன்னை
தூக்கி சுமந்த இடம்
நீயே விலகி சென்ற
நிலைமையிலும் 
அது எந்நாளும்
என்னை வஞ்சிக்காது
என்ற எண்ணம் தான் 

உன்னை மட்டும் அல்ல
உன்னை சேர்ந்தவைகளையும்
அவ்வளவு அதிகமாய்
நேசித்தேன், நேசிக்கிறேன்
முழுமையாய் நம்பினேன்,
நம்புகிறேன் இன்னமும்

உனக்கு
பிடிக்கிறதோ இல்லையோ
என் நம்பிக்கையும் 
உன் மேல் கொண்ட நேசமும் 
நீ என்னுடன் இருந்த போதும்
ஏன் , என் உடல் மறைந்த
போதும் கூட தொடரும்

மன்னித்ததாய் காரணம்
சொல்லி உண்மையில்
உன்னை விரும்புவதை
தொடர்கிறேன் ....

Saturday, November 23, 2013

பிறப்பு












குழந்தை பிறப்பு,
தாய்க்கு மறு பிறவி,
காதல் பிறப்பு,
ஒரு ஆணுக்கு மறு பிறவி

இழக்கும் போது மட்டும்
அல்லாமால் பெறும் போதும்
வலி கொடுப்பது
குழந்தையும், காதலும்
மட்டும் தான்

குழந்தை பெறாத பெண்
காதலை பெறாத ஆண்
இவ்விருவருவருக்கும்
ஒரே மன நிலை தான் என்றாலும்

ஒரே வகையான வலி தான் என்றாலும்
ஏனோ சமூகம் ஓர வஞ்சனையுடன் 

பெண்ணை மட்டுமே பலிக்கிறது
அகராதியிலிருந்து நீக்கப்பட
வேண்டிய சொல் சொல்லி

தும்மல்














தும்மிடும் போதெல்லாம்

உனக்கு நினைவில் வரட்டும்
அன்றோரு நாள்
உன்னை நனைத்து விட்டு 
சென்ற மழையின் 
ஞாபகம் அல்ல, என்றுமே
உன்னை நினைத்து
கொண்டிருக்கும் 
அடியேனின் ஞாபகம் 

Thursday, November 21, 2013

உதயம்












இந்த உலகத்திற்கு
சூரியன் உதித்தால் தான்
நாளை விடியல்
எனக்கோ என்னவளே
உன்னை நினைத்தால்
மட்டுமே ஒவ்வொரு
நாளும் விடியல்

எது எப்படியோ, எந்த
தடையுமின்றி சூரியன்
தினமும் உதிக்கும் தான்
ஆனால் எனக்கோ ஆயிரம்
தடைவரினும் 
உன் நினைவுகளே இனிக்கும்
என் வாழ்க்கையும் அதை
சார்ந்தே நிகழும், நகரும் 

ஒரு நாளில், ஒருவேளை
சூரியன் கூட தன்  கடமையை
மறக்கலாம், பூமி கூட இருளில்
மூழ்கலாம், என்னவளே
என் உலகின் வெளிச்சமாம்
உன் நினைவுகள் என்றுமே
எனக்குள் மறையாது

முயற்சி

















முயன்றால் முடியாதது
எதுவும் இல்லையாம்
இவ்வுலகில்

இந்த வரிகள் வார்த்தைக்கு
மட்டும் தான் சாத்தியமோ??

என்னை மிகவும் பிடித்தும்
அதை ஏற்க மறுக்கும்
என்னவளின் வீண்  பிடிவாதத்தை
வேறு யாரோ அல்ல அவளே
முயன்றும் மாற்றிக்கொள்ள
முடியவில்லை 

தன்னால் தன் பிடிவாதத்தை
மாற்ற முடியாது என என்னவள்
முயற்சிப்பதேயில்லை,
ஆனால் நானோ என்
முயற்சியை என்றுமே கை
விடுவதாயும் இல்லை  

என்னை ஏற்க மறுக்கும்,
என்னை மறக்க நினைக்கும்
அவள் பிடிவாதத்தை மாற்ற
முயன்றே பார்த்து விடுகிறேன்
இவ்வுலகின் கடைசி எல்லை
இவ்வுலகின்  கடைசி நொடி
வரை போராடி சென்றாவது

எனக்கு தேவையெல்லாம்
என்னை பிடிக்குமென்று
இதழோரப் புன்னகையுடன்
மௌனமாய் ஒரு சம்மதம்
என் காதலுக்கு.. 

தேர்வு












கண்டிப்பாய்
தோற்று விடுவேன் என
தெரிந்தும், அவள் வைக்கும்
காதல் தேர்வில்
வெறும் வருகை பதிவு மட்டும்
செய்து கொண்டிருக்கிறேன்
என் கவிதைகளால்

என்னவளே !!!
மறக்காமல் திருத்திக்கொடு
என் விடைத்தாளை
மறைக்காமல் திருப்பிகொடு
என் வாழ்நாளை ...  

Monday, November 4, 2013

காதல் வலி

















ஒரே வரி இரண்டு முறை

வாசிக்கபடுகிறது 
ஓர் அழகிய கவிதையில்
ஒரே வலி பல முறை 
நேசிக்கப்டுகிறது 
நம் அழகிய காதலில்... 

பூ

















நான் வேண்டிய போது
நீ கொடுக்காத, 
எனக்கு கிடைக்காத
இந்த ரோஜாப்பூ

நீ கொடுக்கும் இந்த
நேரத்தில் என்னை 
சேர்க்கிறது என்
கல்லறை பூவாக

எங்கே தொலைந்தது
நம் அன்பு, இப்போது
என்ன ஆனது 
உன் புன்னகை பூ ??

விந்தை
















என்னவளே!!!
கன்னத்தில் கை வைத்து
அழகாய் நீ யோசிக்கையில்
இந்த பிரபஞ்சத்தின்
தொடக்கம் பற்றிய ரகசியமும்
எளிதாய் உனக்கு புலப்பட்டு
விடும் என்றே தோன்றுகிறது

ஒருவேளை விஞ்ஞானிகள்
அந்த ஆராய்ச்சிகளை தவிர்த்து
உன் சிந்தனையின் தோன்றியவற்றை
குறிப்பெடுக்க துவங்கினால்
ரகசியம் என்ற ஒன்றே இல்லாமல்
போய்விடும் இவ்வுலகில் 
என்ற ரகசி யம் இன்னும்
அவர்களுக்கு புரியாமல்
இருப்பது தான்  மிகப்பெரிய
விந்தை

இதயம்

















நான் சுமாராய் 
கவிதை எழுதுவேனென்று
என தெரிந்து கொண்ட
நண்பனுக்கு  
"இதயம்" பற்றிய கவிதை
ஒன்று வேண்டுமாம் 

எங்கே போவேன்
என் இதயம் பத்திரமாய்
என்னவளிடம் இருக்கும்
போது, என்னைவிடவும்
மிகுந்த அக்கறையுடன்
அவள் அதை
பார்த்துக்கொள்ளும் போது,
தன் உயிராய் அதை
அவள் நேசித்து
பாதுகாக்கும் போது

அவளிடம் ஒப்படைத்து
விட்ட பிறகு எனக்கே
அதில் உரிமை இல்லை
என்ற போது 
என்னிடம் இல்லாத ஒன்றை
பற்றி நான் எப்படி சிந்திக்க ??
இல்லை அதை பற்றி
என் கவிதையில் எப்படி
வர்ணிக்க ??

மன்னித்து விடு தோழா 
இதயம் அவளிடமும்,
அதன் துடிப்பு அவளாகவும்
இருப்பதால் 
முதல் முறையாய் நட்புடன்
நம்பிக்கையுடன் நீ கேட்டதை
செய்து தர மறுக்கிறேன் 

Thursday, October 31, 2013

இல்லாத விடியல்











நேற்று தான் எங்கோ படித்தேன் 

காதலோ, நட்போ எந்த உறவுமே 
பாட்டாம் பூச்சி போல
இறுக பிடித்தால இறந்துவிடுமாம்
விளையாட்டாய் பிடித்தால்
பறந்துவிடுமாம்

ஆனால் எனக்கோ
அதை எப்படி பிடிப்பதென்றும்
தெரியவில்லை, அதற்கும்
என்னிடம் எப்படி இருப்பதென்று
தெரியவில்லை 

ஒருவேளை இப்படி இருக்குமோ?
என் வாழ்க்கையில் மட்டும்
உறவின் கையில் அகப்பட்ட
பட்டாம்பூச்சி நானாய்
இருக்கிறேனோ??

என்னை இப்படி கைஆளுகிறதே
எல்லா உறவுகளும். 
ஒவ்வொரு நாளும் மரண
பயத்துடன் பறக்க நினைத்தும்
முடியாமால்....
நரக வேதனையுடன் நகர்கிறது
என் வாழ்க்கை

பிழைப்பேன் என்ற நம்பிக்கை
முற்றிலுமாய் அழிந்து போக
இன்னும் எதற்கு தான்,
எதுவரை தான் என் ஆயுள்
நீண்டிருக்கிறதோ??

பூக்களும் கூட ஒவ்வொரு
ஒவ்வொரு நாளும்
விடியளுக்காய் காத்திருக்க,
நான் மட்டும்
நாளை என்ற ராட்சசனை
எதிர் கொள்ள முடியாமல்
வேண்டிகொண்டிருக்கிறேன்
முழு நேர இருட்டிற்காய்

பட்டம் பூச்சிகள் இரவில்
பறப்பதும் இல்லை
என் வாழ்க்கையில்
விடியலே இனி என்றும்
இல்லை

தொடரும்

















தொட்டில் பழக்கம் சுடுகாடு
வரை தொடருமாம்
பழமொழி சொல்கிறது

என்னவளே நான் தொட்டிலில்
கிடந்த போது  நீ யார்
என்பதை கூட அறியேன்

ஆனாலும் உன் பழக்கமும்
நினைவுகளும் எப்படி
என் கல்லறை வரையிலும்
கூட தொடர்கிறது

இது எப்படி சாத்தியம்??  

Tuesday, October 29, 2013

எறும்பு













எறும்பாய் மாறிட ஆசை
படுகிறேன் அல்லது
எறும்பாய் அடுத்த
ஜென்மத்திலாவது பிறந்திட
வேண்டிக்கொள்கிறேன்

காரணம்
எறும்பு தான் தன்னை
காட்டிலும் பல மடங்கு
சுமையை தூக்கி
சுமக்குமாமே

அது போல்
என் எடையை விட பல
மடங்கு எடை கொண்ட
உன் கனத்த நினைவுகளை
இந்த ஜென்மத்தில் மட்டும்
அடுத்த ஜென்மத்திலும்
என் இதயத்தில் 
தூக்கி சுமக்க விரும்புகிறேன்
சுமையாய் அல்ல
சுகமாய்......

தவறு

















தோழியே 
தவறே செய்யாதவன்
என்னை தவிர்த்து,
தனிமைபடுத்தி,
என்னை விட்டு விலகி
என்னை தண்டித்தாய்

எனக்கோ காரணம் 
அறியவில்லை ஆனால் 
உனக்கோ காரணம்
சொல்ல தோன்றவில்லை
இல்லையில்லை ஏனோ
பிடிக்கவில்லை

உன்னை
சமாதான படுத்துவதாய்
எண்ணி நான்
செய்தவைகளில் பலவற்றிலும்
தோல்வியே பெறுகிறேன்

உண்மையில் இப்போதுதானடி  
அதிகமாய் தவறுகள் செய்ய
கற்றுகொண்டிருக்கிறேன்
செய்து கொண்டிருக்கிறேன்
என்னையும் அறியாமல்

எனக்கு ஆதரவாய்
தோள் கொடுக்க வேண்டிய
நேரத்தில் ஏனோ நீ
எனக்கு எதிராகவே வாள்
எடுக்கிறாய்..

வெட்ட வேண்டாம் நானே
வீழ்ந்து போகிறேன்

கடைசி ஆசையாய் 
எப்போதும் போல
நீயே ஒருமுறை வந்து
என்னை திருத்தி விடு
புதிய முகம் எடுத்து
வந்தேனும் என்னை
பழைய நல்லவனாய்
திருப்பிக்கொடு

காத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்
ஏற்றுக்கொள்கிறேன் அது
மன்னிப்பென்றாலும்,
மரண தண்டனை என்றாலும்
பழைய புன்னகையுடன்..

கவிதை


















உன்  முக-புத்தகத்தில்
எனக்கு மட்டுமே
புரியும் படி  ஆயிராயிரம்
அழகு கவிதைகள்

அதை எழுதிய
கவிஞனை நான் அறியேன் 

ஆனாலும் அதை மொத்தமாய்
படித்திட எனக்கு மட்டுமே
அனுமதி தந்த என்னவளுக்கு
மட்டுமே என் உரித்தாகட்டும்
என் நன்றிகள்

Thursday, October 17, 2013

ஏமாற்றம்












தோழியே !!!
இப்போது கூட சுயநலமாய்
தானே யோசித்திருக்கிறாய்
என் நெஞ்சில் நீயும்
உன் நட்பும் நிறைய 
நிறைந்திருக்கிறதென்று
தெரிந்து 
முதுகில் குத்தினாயே 

வலிக்கிறது தான்
பின்நாளில் நீ உண்மையை
அறிந்து என்னிடம் திரும்ப 
வரும்போது என்னை 
பார்க்க கூட முடியாமல் 
வருத்தப்படுவாயே 
என்று நினைத்திடும் போது 

தாய்மை













வரம்
இந்த வார்த்தையை
கேட்ட மாத்திரத்தில்
உன் தாயும் 
அவள் நினைவுகள் பற்றியும்  
எழுத உனக்கு 
எண்ணம் தோன்றுகிறதா?

"தாய்மை" 
உண்மையில் உலகிற்கு 
கிடைத்த மிகப்பெரிய 
வரம் தான்..

Sunday, October 6, 2013

எது அழகு?














உன் புன்னகையா?
தன் புன்னகையா?
எது அழகு?
என்று நீ வைத்திருக்கும்
பூக்களுக்குமே ஒரு
சந்தேகம்

நீ வென்று விடுவாயோ
என்ற சோகத்தில்
பூக்கள் வாடிப்போனது
உன் புன்னகையோ
பூக்கள் வாடிவிட்டது
என தீர்ந்து போனது

பொறாமையால் தீர்ந்து
போன பூக்களின்
புன்னகையா?? அல்லது
நேசித்த பூக்கள் வாடியதால்
மறைந்து போன உன்
புன்னகயா எது
சிறந்தது??

Monday, September 23, 2013

மதிப்பு










ரூபாயின் மதிப்பு
வீழ்ந்து விட்டதாம்
எனக்கு என்ன கவலை
என்னவள் என்னிடம்
கொடுத்த ஒரு பத்து
ரூபாய் நோட்டில்
இந்த உலகமே என் கையில்
கிடைக்கப்பெறும் போது 

என் வீட்டு கண்ணாடி

















நான் மிகவும் நேசித்த,
அளவுக்கு அதிகமாய்
விரும்பிய ஓர் இதயம்
என்னை ஏமாற்றிய பின்பு
தான் உணர்ந்துகொண்டேன்
இந்நாள்வரையில் 
நான் நம்பிய, நான் நம்பும் பல
என்னை ஏமாற்றிக்கொண்டு
தான் இருந்திருக்கிறது

உதாரணமாய் 
தோல்வியுடனும்,
ஏமாற்றத்துடனும் அதன் முன்
நான் என் முகம் காட்ட
இது வரை தனக்கென தனி
முகமில்லை என என்னிடம்
நடித்துக்கொண்டிருந்த
நான் நம்பிக்கொண்டிருந்த
என் வீட்டு கண்ணாடி தன்
சுயமுகம் காட்டியது

தோல்வியில் துவண்டு, 
ஏமாற்றத்துடன் ஏங்கி,
கண்களில் கண்ணீருடன்
நிற்கும் என்னை 
பார்த்து ஏளனமாய்
சிரித்தது

அந்த சிரிப்பில் அது
சூசகமாய் சொன்னது
"உனக்கொன்றும்
தோல்வியோ, ஏமாற்றமோ,
இழப்போ, அழுகையோ 
புதிதல்ல
நீ பார்க்கும் போதெல்லாம்
உன்னை ஏமாற்றும் என்னை
விடவா நேற்று வந்த அந்த
இதயம்..உன்னை
ஏமாற்றிவிட்டது
இதற்க்காகவா இப்படி
நொறுங்கிவிட்டாய் ?"

இதுதான் உலக உண்மை
என உணர்ந்து, அதன் முன்   
சிரிக்க முற்பட்டேன் இந்த
முறை என் பிம்பம் மட்டும்
சிரிக்க, என் வீட்டு கண்ணாடியோ 
திரும்பவும் என்னை
ஏமாற்ற துவங்கியது