
தோழியே
தவறே செய்யாதவன்
என்னை தவிர்த்து,
தனிமைபடுத்தி,
என்னை விட்டு விலகி
என்னை தண்டித்தாய்
எனக்கோ காரணம்
அறியவில்லை ஆனால்
உனக்கோ காரணம்
சொல்ல தோன்றவில்லை
இல்லையில்லை ஏனோ
பிடிக்கவில்லை
உன்னை
சமாதான படுத்துவதாய்
எண்ணி நான்
செய்தவைகளில் பலவற்றிலும்
தோல்வியே பெறுகிறேன்
உண்மையில் இப்போதுதானடி
அதிகமாய் தவறுகள் செய்ய
கற்றுகொண்டிருக்கிறேன்
செய்து கொண்டிருக்கிறேன்
என்னையும் அறியாமல்
எனக்கு ஆதரவாய்
தோள் கொடுக்க வேண்டிய
நேரத்தில் ஏனோ நீ
எனக்கு எதிராகவே வாள்
எடுக்கிறாய்..
வெட்ட வேண்டாம் நானே
வீழ்ந்து போகிறேன்
கடைசி ஆசையாய்
எப்போதும் போல
நீயே ஒருமுறை வந்து
என்னை திருத்தி விடு
புதிய முகம் எடுத்து
வந்தேனும் என்னை
பழைய நல்லவனாய்
திருப்பிக்கொடு
காத்திருக்கிறேன்
உன் வருகைக்காய்
ஏற்றுக்கொள்கிறேன் அது
மன்னிப்பென்றாலும்,
மரண தண்டனை என்றாலும்
பழைய புன்னகையுடன்..
No comments:
Post a Comment