எறும்பாய் மாறிட ஆசை
படுகிறேன் அல்லது
எறும்பாய் அடுத்த
ஜென்மத்திலாவது பிறந்திட
வேண்டிக்கொள்கிறேன்
காரணம்
எறும்பு தான் தன்னை
காட்டிலும் பல மடங்கு
சுமையை தூக்கி
சுமக்குமாமே
அது போல்
என் எடையை விட பல
மடங்கு எடை கொண்ட
உன் கனத்த நினைவுகளை
இந்த ஜென்மத்தில் மட்டும்
அடுத்த ஜென்மத்திலும்
என் இதயத்தில்
தூக்கி சுமக்க விரும்புகிறேன்
சுமையாய் அல்ல
சுகமாய்......
No comments:
Post a Comment