Monday, November 25, 2013

விரும்புகிறேன்

















என்னை
தூக்கி எரிந்து விட்டு
சென்ற உன்னை
மறக்கும் படி மூளை
கட்டளையிட,மனமோ
மன்னித்துவிடும்படி
மன்றாடியது

உன் பேச்சை மட்டுமே
கேட்டு நடந்தவன் நான்
இப்போது
புரியாமல் தவிக்கிறேன்
எதன் பேச்சை கேட்பது
என்று தெரியாமல்

கடைசியாய் ஒரு முடிவு
மனதின் வார்த்தைகளை
கேட்பதென்று..

காரணம் நீ குடியிருந்து
விட்டு சென்ற இடம்
வெகு காலமாய் உன்னை
தூக்கி சுமந்த இடம்
நீயே விலகி சென்ற
நிலைமையிலும் 
அது எந்நாளும்
என்னை வஞ்சிக்காது
என்ற எண்ணம் தான் 

உன்னை மட்டும் அல்ல
உன்னை சேர்ந்தவைகளையும்
அவ்வளவு அதிகமாய்
நேசித்தேன், நேசிக்கிறேன்
முழுமையாய் நம்பினேன்,
நம்புகிறேன் இன்னமும்

உனக்கு
பிடிக்கிறதோ இல்லையோ
என் நம்பிக்கையும் 
உன் மேல் கொண்ட நேசமும் 
நீ என்னுடன் இருந்த போதும்
ஏன் , என் உடல் மறைந்த
போதும் கூட தொடரும்

மன்னித்ததாய் காரணம்
சொல்லி உண்மையில்
உன்னை விரும்புவதை
தொடர்கிறேன் ....

No comments:

Post a Comment