என்னை விட்டு விலகி சென்ற
அவளை நினைக்கவே
கூடாது என்று நினைத்தபடி
தான் ஒவ்வொரு காலையும்
எழுகிறேன்
இப்படி நினைத்த மாத்திரத்தில்
என் மனம் "எவளை" என்று வினவ
"என்னவளை" தான் என உடனே
நினைத்து விடுகிறேன் அவளை
இது ஒரு நாளில் சில முறை அல்ல
பல முறை நிகழ்கிறது
நின்னைக்க கூடாதென்றே
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நாளும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அவள் நினைவுகளுடன்
என்னை மறக்க நினைக்கும்,
நினைக்க மறுக்கும் அவளை
நான் ஏனோ மறக்க மறக்கிறேன்
உண்மையில் மறக்க மறுக்கிறேன்
இப்போது தோன்றுகிறது ஒருவேளை
அவள் நினைவுகள் இருப்பதால் தான்
என் நாட்கள், என் வாழ்க்கை இவ்வளவு
இனிமையாய் தொடர்கிறதோ??
மனம் சிரித்து விட்டு சொன்னது
உன் நாட்களோ உன் வாழ்க்கையோ
மட்டும் உன் உயிரும் கூட உன் உடலில்
அவள் நினைவுகலாலயே தொடர்கிறது
உண்மை புரிந்தாலும் என் செய்ய??
நாளை காலையும் அவள் நினைவுகளை
மறக்க நினைப்பேன்
இது தொடரும்....
No comments:
Post a Comment