Saturday, December 7, 2013

வருகையின் நிழல்













உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன், அனுதினமும்
தவறாமல் உன்னையே  
நினைத்து மட்டுமே
வாழ்கிறேன், ஏனோ
இறக்க முடியாமல் கூட
இன்னமும் இருக்கிறேன் 
நீ என்னை விட்டுச்சென்ற
நீ எனக்காய் விட்டுசென்ற
இவ்வுலகில்
எதுவுமே அழகில்லை என்றோ,
எதுவுமில்லை என்றோ சொல்ல
வழியில்லை என்றாலும்
நீ இல்லை என்பதால்
நீ எனக்கில்லை என்பதால் 
இவற்றை எல்லாம்
சொல்லிக்கொண்டு தான்
இருக்கிறேன், போதுமடி
மற்றதெல்லாம் தேவையில்லை
நீ மாத்திரம் போதுமெனக்கு
வந்துவிடு

தூரமாய் தெரிகிறது
உன் வருகையின் நிழல்
நிஜமாகுமா .

1 comment:

  1. இந்த கவிதையில் முதல் வரியில் முட்யும் வார்த்தை முதல் வரிக்கும் சொந்தம் இரண்டாம் வரிக்கும் சொந்தம்
    உதாரணமாய் : அனுதினமும், ஏனோ, இவ்வுலகில், இவற்றை, போதுமடி

    ReplyDelete