Thursday, December 22, 2011

வெள்ளைத்தாள்
















நானும் கூட
ஒரு வெள்ளைத்தாள்
போல் தான்
எனக்கென்று திசையின்றி
காற்றடிக்கும் பக்கம்
பறந்துகொண்டிருந்தேன்
எல்லாம் அவள் வரும் வரை தான்

எப்போதவள் என்னில்

காதல் கவிதை எழுதி
என்னை கனமாக்கிவிட்டளோ,
அன்று முதல் அவள்
மூச்சுக்காற்றுக்கு மட்டுமே
அசைந்தாடும் பக்கமாகிவிட்டேன்
அவளின் நாட்குறிப்பில்

நிரந்தரமாய்....

No comments:

Post a Comment