மாற்றம் ஒன்று தான்
உலகில் மாறாததாம்
ஒத்துக்கொண்டேன்
உன்னை சந்தித்த போது
எனக்குள் ஏற்பட்ட
மாற்றங்களை கண்டு
அப்போது உணரவில்லை
நான் எமாற்றப்பட்டு
கொண்டிருக்கிறேன் என்று
இப்போததை
உணரும் போது நீ
எனக்குள் ஏற்படுத்திய
மாற்றங்களில் இருந்து
விடுபட முடியவில்லை
காரணம் நீ என்னை
ஏமாற்றி சென்றாய் என்பதை
என் மனம் இன்னமும் கூட
ஏற்கவும் இல்லை
என்னாலயே என்னை
புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை
என்றால் இனி யாரால் கூடும்
இதே நிலைமை தான் என்
மரணம்வரை எனவும்
எண்ணத் தோன்றுகிறது
எனக்கு மட்டும் என்
மாற்றங்கள் மாறவில்லையே
அது ஏன் ??
இப்போது மாற்றத்தின் நியதி
என்னானது??
எனக்கு மட்டும் அது
பொய்த்துப்போனதோ ??
காலம் பதில் சொல்லட்டும் .
No comments:
Post a Comment