பல தெருக்களில் அலைந்து
கஷ்டப்பட்டு
தனக்கு பிச்சையாய் கிடைத்த
சிறு உணவையும்
அருகிலிருக்கும் நாய்க்கும்
பகிர்ந்தளித்து உண்ணும்
வள்ளலாம் தன் தந்தையை
வீட்டில் வைத்து
உணவளிக்க முடியாத மகன்
தருமம் தலை காக்கும்
என்பதையரியா மூடனவன்
ஒருவேளை
எல்லா பொருள்களையும்
இவ்வாறே தானமாய்
தந்துவிடுவார் என்ற பயத்தினால்
வீட்டிலிருந்து விரட்டியடித்தானோ??
இப்போதொரு சந்தேகம்
யார் பிச்சைக்காரன் ??
பொதுவுடைமை எண்ணம் கொண்ட
தந்தையா??
தனக்கு மட்டுமே வாழும்
சுயநலம் கொண்ட தமையனா??

No comments:
Post a Comment