Wednesday, December 14, 2011

இமைகள்

  










இரு தண்டவாளத்தின்
இடையே அழகாய்
பயணிக்கும்
தொடர்வண்டியாய்
இரு இமைகளுக்குள்ளேயே
பயணிக்கும் அவள் கருவிழிப்
பார்வையின் சேருமிடம்
நானாக இருக்க வேண்டுகிறேன்


ஐயோ  மறந்தே விட்டேன்
எந்த தண்டவளாமும்
இணைவதில்லையே பின்
எப்படி நாணத்தால்
அவள் கண்சிமிட்டும்போது
மட்டும் அவள் இமைகள்
பிரிந்து பின்பு சேர்கின்றது  


ஒருவேளை
எதோ ஒரு சூலில் நீங்கள்
இருவரும் பிரியநேரிட்டாலும்
பின்பு எப்படியும்
சேர்ந்துவிடுவீர்கள் என்று 

எங்களுக்கு
நம்பிக்கைதரத்தான் இந்த
செயல் நடைபெறுகிறதோ ? 

No comments:

Post a Comment