Monday, May 28, 2012
Thursday, May 24, 2012
உலக அதிசயம்
பழைய உலக அதிசயங்கள்
படித்தும், பார்த்தும்
சலித்துப் போனதாம்
புதிய உலக அதிசயங்களுக்காண
தேடல்கள் துவங்கிவிட்டது
என்னவளே நீ
வெளியே தலை காட்டி விடாதே
எதிர்ப்பின்றி நீ வென்றிடுவாய்
முதல் உலக அதிசயமாய்
காரணம்
மனிதன் படைத்தவற்றின்
நடுவே கடவுளாலேயே
படைக்கப்பட்டு மண்ணில் வாழும்
முதல் அதிசயம் நீ
முதல் அழகியும் நீ
இதயம்
நான் எதையோ தொலைத்தவனாய்
சோகமாய் உட்கார்ந்திருக்க
அப்பா சொன்னார் "பொறுப்பற்றவன்
எதையோ தொலைத்து விட்டான்" என்று
அம்மா சொன்னாள் "சொன்னால்
நாங்களாவது தேடித்தருவோம்" என்று
தங்கை சொன்னாள்
"நான் எடுக்கவே இல்லை" என்று
தம்பியோ "நல்லா வேண்டும்" என்றான்
அவர்களிடம் நான் எப்படி சொல்வேன்
நான் தொலைத்தது என்
விலைமதிப்பில்லா இதயத்தை என்று
Tuesday, May 22, 2012
தேர்வு
நான் மட்டும் தேர்வறையில்
ஒன்றும் எழுதாமலே
உட்கார்ந்திருந்தேன்...
நேற்று சுமாராய் படித்ததை
ஞாபகப்படுத்த முயற்சிக்க
நினைவிற்கு வந்ததெல்லாம்
தேவதையாம் அவள் நினைவு
கடைசி சில மணி நேரமென
கண்காணிப்பாளர் கண்டிக்க
கேட்டிருந்த கேள்விகளுக்கெல்லாம்
அவள் பெயரை எழுதி
வைத்துவிட்டு வீடு திரும்பினேன்
காரணம், எனக்கு தெரிந்த
ஒரே பதில் நீ தான்,
நீ மட்டும் தான்.....
Monday, May 21, 2012
Subscribe to:
Posts (Atom)












