நான் பிறந்தது முதல் இந்நாள்
வரை எதையும் அதிகமாய்
விரும்பியதில்லை,
அப்படியே விரும்பினாலும்,
அது கிடைத்ததில்லை,
ஒருவேளை கிடைத்தாலும்
கூட நிரந்திரமாய் அது
என்னுடன் இருந்ததில்லை
இப்படி தோல்விகளையும்
ஏமாற்றங்களையும் சுமந்த
நான் தான் உலகின் மிகப்பெரிய
துரதிர்ஷ்டசாலி
இல்லையில்லை
"துரதிர்ஷ்டம்" என்ற
வார்த்தைக்கும் கூட பாதிக்கு மேல்
அதிர்ஷ்டம் இணைந்துகொள்கிறது
எனக்கோ என் வாழ்க்கையின்
பாதிக்கு மேல் கடந்த பிறகும்
இன்னமும் கிடைக்கவில்லை
வீணாய்ப்போன அந்த அதிர்ஷ்டம்