Thursday, August 25, 2011

பாட்டில் சொன்னவை














போதையில் குடிகாரன் சொன்னான்
காலி பாட்டிலிடம்
"உன்னில் மது தீர்ந்துவிட்டது
நீ இப்போது உபயோகமற்றவன்
நீ சேரப்போவது
குப்பைத்தொட்டியில்" ...
பாட்டில் தெளிவாய் சொன்னது
"மூடா
என்னில் மது இருந்த போதும் கூட
என்னை அது அழிக்கவில்லை
உனக்கோ  அப்படியில்லை
இப்போது
உன்னில் மது நிறைந்துவிட்டது
நீ தான் உபயோகமற்றவன்
நீ உறங்கப்போவது
சவப்பெட்டியில் "....

No comments:

Post a Comment