Thursday, August 25, 2011

பெற்றோர்
















தான்தோன்றி
கடவுளும் பெற்றோர்
பாசத்திற்கு
ஏங்கித்தான்
அடிக்கடி
மனித உருவெடுத்து
மண்ணில் பிறக்கிறாரோ???

நட்பு

சவமாய் படுத்துக்கிடந்தவனுக்கு
கண்டிப்பாய் தோன்றி இருக்கும்
இனி இவ்வுலகில்
நான் அழப்போவதில்லை...
அழத்தேவையும்  இல்லையென்று
ஆனாலும்

எழதுடிப்பான்
தனக்காய் அழும்
தன் நண்பனை
தேற்ற ...

பாட்டில் சொன்னவை














போதையில் குடிகாரன் சொன்னான்
காலி பாட்டிலிடம்
"உன்னில் மது தீர்ந்துவிட்டது
நீ இப்போது உபயோகமற்றவன்
நீ சேரப்போவது
குப்பைத்தொட்டியில்" ...
பாட்டில் தெளிவாய் சொன்னது
"மூடா
என்னில் மது இருந்த போதும் கூட
என்னை அது அழிக்கவில்லை
உனக்கோ  அப்படியில்லை
இப்போது
உன்னில் மது நிறைந்துவிட்டது
நீ தான் உபயோகமற்றவன்
நீ உறங்கப்போவது
சவப்பெட்டியில் "....

Wednesday, August 24, 2011

நண்பன்












மாதா
பிதா
குரு
தெய்வம்
நண்பன் எங்கே ???
எனக்காக மட்டும் அல்ல
என் நேசங்களுக்காகவும்
என் உறவுகளுக்காகவும்
கூட
தன் நிலையையும் விட்டுக்குடுத்து விட்டு
என் வாழ்க்கையை 

ரசித்துகொண்டிருக்கிறான்
போலும்....

Monday, August 22, 2011

வாசிக்காமல் ...
















ஒரு முறை கூட வாசிக்காமல்
காற்றாய்
புரட்டி விட்டாயே
என்
வாழ்க்கை பக்கங்களை
......

Friday, August 19, 2011

வேதனை

பலகனவுகளுடன்
பெண் பார்க்கும் படலம் ...
பெண்ணுக்கும் என்னை பிடித்திருக்க
எனக்கும் அவளை பிடித்திருந்தது ...
ஆனாலும் இது அமையாமல் போனது

பெண்ணின் தந்தை சொன்னாராம்
மாப்பிள்ளை கலர் கம்மி என்று ... 


அவமானபடுத்தியதாய்
எனக்குள் ஒரு உணர்வு
பின்பு
என்னை நானே
தேற்றிக்கொண்டேன்  இவ்விதமாய்



கலர் கலராய் இருக்க நான் என்ன
வானவில்லா ??
அந்த  வான வில்லிலும் இல்லாத
நிறம் எனக்கிருக்கிறதென்ற
பெருமிதம் கொள்கிறேன்



சிறிதுணவனாலும் சுற்றத்தாருடன்
பகிர்ந்து உண்பதை எடுத்துரைக்கும்
அந்த காக்கையும் கூட
கருப்புதான்
காக்கையும் தன் சொந்தமென
சோறு வைத்துவிட்டு
தான் உண்ணும்
எம் தமிழன் கருப்பு தான் ,
இதை மூடநம்பிக்கையென வாதிட்ட எம்
பகுத்தறிவு பகலவன்
அணிந்த மேல்சட்டையும்
கருப்பு தான்



கொட்டும் மலையிலும்
கொளுத்தும் வெயிலும்
அயராது உழைக்கும் எம்
உழவனின் நிறம் 
கருப்பு தான்


எந்நிறம் சேரினும்
தன்னிறம்  மாறா
இயல்பினை பெற்ற
இந்நிறத்தை
உன் கருவிழியில்
உன் தாய்
கருவறையில்
நீ காணவில்லையா???


உதிரப்போகும் தலைமுடி
வெளுத்துபோனால்
கவலை கொள்ளும் மானிடா
உன் தோல் வெள்ளையாக
முயச்சிற்பது ஏனடா ???


மனித இனத்தில்
மட்டுமன்றி
பிற உயிரனங்களிடமும்,
ஏன் அக்ரினைகளிலும்
கூட இந்நிறத்தை
தவிர்க்கும் உன்னை
கேலியாகத்தான் பார்க்க
தோன்றுகிறது  ...


நேற்று பளிச்சிட்டு
இன்று மங்கி
நாளை சுருங்கும்
தோலுக்கும்
அதன் நிறத்துக்கும்
எதற்கிந்த முக்கியத்துவம் ???



என் முண்டாசு
கவிஞன்
வெள்ளைப்பூனையிட்ட
பலநிறம் கொண்ட
குட்டிகளிடமே வேறுபாடு காணாதவன்
அனால் நீயோ
நிறத்தால் எம் பாரத அன்னை
ஈன்ற மக்களில் வேறுபாடு
காணலாகுமோ ???



வெறும் நிறமென்று நில்லாமல்
வரலாற்றில் இதற்குத்தான்
எத்தனை போர்கள்
எத்தனை உயிர் பலிகள்
இது இன்றும்
தொடர்வதுதான் வேதனை

போதும் நண்பா!!!

அடிமை விலங்கையும் 
தாழ்வு மனப்பான்மையும்
உடைத்தெறிந்து 

இந்த சமூக சீர்கேட்டை
எதிர்த்து
நாம் காட்டுவோம்
நம் முதல்
கருப்புக்கொடி.........

Friday, August 12, 2011

கவிஞன்














இவன்
மனித வேடமிட்டவர்
மத்தியில்
சற்றே வேறுபடுகிறான்  ...

இவன்
அதிகமாய் யோசிப்பவன் அல்ல
அதிகமாய் யோசிக்க வைப்பவன் 

இவன்  - கவிஞன்

தனிமை











அடிமையாக்கப்பட்டிருந்தாலும்
மீண்டு எழுந்திருந்திருப்பேன்
இப்படி
நண்பர்களிடம் இருந்து
பிரிக்கப்பட்டு 
தனிமையாகப்பட்டேனே
இனி என் செய்ய ???

நிலவு காய்கின்றது













இவ்வளவு
மழையிலும்
ஏன் காய்கிறது
நிலவு???

நிலவு
























நிலவும் கூட
தன்னம்பிக்கை
யின்
எடுத்துக்காட்டு தான்
தன் கறைகளால்
முன்பு தேய்ந்தாலும்
விடாமுயற்சியுடன்
பின்பு வளர்கிறதே!!!

Thursday, August 11, 2011

புதிர்
















தேடிக்கொண்டே இருக்கிறேன்
வாழ்க்கை புதிருக்கான
விடையை
என் கைரேகையில்
அல்ல
என் கால்கள்
செல்லும் பாதையில் ...

அ முதல் - அம்மா












அன்பாய் அழகாய் அரவணைத்து
ஆராரிரோ பாடி
இன்னல்கள் பலவந்தும் இன்முகத்துடன்
ஈகாயாய்
உணவளித்து
ஊக்கமளித்து
எம்மை, வெற்றிப்படிக்கட்டில்
ஏற்றி விட்டவளென்று
ஐயமின்றி பெருமையாய் சொல்வோம்
ஒழுக்கத்தை
ஓங்கிச்சொன்ன 
ஔவையாரை நினைவுபடுத்துபவள்
அன்னை
ஆதலால்
இவ்வுலகம் காய்ந்து அழியாமல்
ஈரமாய் இருக்க
உதவும் உயரிய 
தாய்மையை போற்றுவோம்

பிறந்தநாள்



















என்னவளின் எல்லா
பிறந்தநாளிலும் 
மழை கொட்டித்தீர்க்கிறது
அழகிய நட்சத்திரத்தை
பூமிக்கு பரிசளித்து விட்டோமென்ற
ஆனந்தக்கண்ணீரா ??
தன்னிடமே வைத்துக்கொள்ள
தவறியதால் வானம்
வேதனையால்
விடும் கண்ணீரா ?

கரைகிறேன்

















மழையில் நீ நனைவதால், நான் கரைகிறேன்

Wednesday, August 10, 2011

அன்னை
















ஆண்டவனின்
பெண்பால்
"அன்னை"

பசி














இன்பதுன்பம்
எது வரினும்
சரியான வேளைகளில்
அலாரம் அடித்தார்ப்போல்
வேண்டும் சாப்பாடு
என்று
வயிறு போடும் கூப்பாடு
" பசி
"

நகக்கண்கள்












என்னவளை காணாது
என்
நகக்கண்களும்
கண்ணீர் விடுகின்றது

Tuesday, August 9, 2011

பட்டாம்பூச்சி
















பளீச் சிடும் 
பட்டுப்புடவையில்
ஓர்
பட்டாம்பூச்சி!

கோலங்கள்












மயில் தோகையால் வருடி
சிற்றருவிச்சாரலாய்
என் பூமித்தாயை
குளிரூட்டி,குளிப்பாட்டி
இன்றைய போருக்காய்
ஆயத்தம் பண்ண
சிறு புள்ளிகளை இணைத்து
வீரத்தையும்  கோர்த்து
வெற்றி திலகமிடுகிறாள்
என் வீட்டு
தமிழ்ப்பெண்

முதல் அடி











நட்பின்
முதல் அடியையாவது
நீ எடுத்து வை
நம் நட்பை
நான் தூக்கி
சுமக்கிறேன்
என் காலம்
முடியும் வரை...

Monday, August 8, 2011

சிதறிய நட்பு














சிதறிய நட்பே
யாரோ ஒருத்தருக்காக
நான் மதித்த
நான் பெருமையாய் நினைத்த
நம் நடப்பை
இப்படி நொறுக்கி
என்னை சிதைத்து ,
புதைத்தும் கூட
விட்டாயடி 

இனி யாரால் கூடும்
இதை சரி செய்ய ??
 
ஒருவேளை
காலத்தின் கட்டாயத்தால்
நம் நட்பு(?) தொடர்ந்தாலும்
இந்த வடுவும்
அதன் வலியும்
உன்னை விட்டோ
என்னை விட்டோ
இனி அகலுமென்று
நான் ஒருபோதும்
நினைக்கவில்லை   

என் நட்பை நீ ஒரு போதும்
உணரபோவதில்லையா ???
 
நானோ 
உயிர் பிரியும்
வலியை உணர்ந்தேன்
நட்பே!!!  உன்னை பிரியும்போது ...

ரங்கோலி (ஹைக்கூ)
















இத்தனை வண்ணம்
பூசி என்

பூமித்தாயும் ஹோலி 
கொண்டாடுகிறாளோ  ???
ரங்கோலி கோலம்


காதல் தோல்வி














இதயம் கண்களை கேட்டது 

துரோகியே !!
என்ன லஞ்சம் பெற்றுக்கொண்டு
என்னை அவளிடம்
காட்டிக்கொடுத்தாய் ???
உன்னால் எனக்குள் நுழைந்தவள்
இன்று எங்கே சென்றாள்
என்னை ரணமாக்கிவிட்டு
சுக்குநூறாய் உடைத்துவிட்டு
இனி நீ அழுதென்ன லாபம் ??

போகட்டும்
இனி நீ ஏமாந்தாலும்
இன்னொருவளை பார்த்தாலும்,
நான் ஏமாறப்போவதில்லை
இன்னொருவளை சுமக்கபோவதும் இல்லை
ஏனெனில் நொறுங்கிய என்னை
ஒட்டவைத்து   விற்க விருப்பமுமில்லை

விடியலை தேடி !!!
















ஓர் விடியலையாவது காண
பல காலமாய்
ஏங்கிக்கொண்டிருகின்றது
என்
இருண்ட உலகம்...........


Monday, August 1, 2011

மழை (ஹைக்கூ )

 

















ஆவியாய் மேலெழும்பி
சாமியாய் வரம் பொழிகிறது
மழை