Sunday, March 24, 2013

ஓர் அடையாளம்

 














இரு மனங்களை 
இணைப்பதுதான்
காதலாம்..

நல்ல விளக்கம் தான்

ஆனால் இணைப்பிற்கான
அடையாளமா அதன் சின்னம்
இல்லையே.ஓர் அம்பு
இதயத்தை குத்தி கிழிக்கிறது
போல் தானே இருக்கிறது 
காரணம் இருக்கிறது
 
உண்மையில் இந்த காதல்
தொடகத்திலோ முடிவிலோ
மனதில் நுழையும் போதோ,
அல்லது மனதை விட்டு
அகலும் போதோ,
தெரிந்தோ, தெரியாமலோ,
ஒரு மனதையோ அல்லது
இரு மனதயுமோ 
துளைத்து விட்டுதானே
தன் வேலையே செய்கிறது..

இதனால் தான் 
காதலின் சின்னம் இப்படி
ஆகிப்போனது..
இது இணைக்கும்
அடையாளம் அல்ல
இன்றும் என்றும் நம்
மனத்தை துளைத்து அதன்
வலியை உணர்த்தும்
ஓர் அடையாளம்...

No comments:

Post a Comment