Saturday, March 16, 2013

தாயின் தயவு
















நான் பிறக்கும் முன்பே
பெரும் முயற்சியுடன்
கடும் தவம் செய்திருப்பேன்
போலும், பிறந்த உடனே
கண்டுவிட்டேனே வரம்
தரும் கடவுளை
ஆம் என் தாயை

அவளும் என் தவத்தை
மெச்சி தந்த வரம் தான்
அவள் அன்போ

எது எப்படியோ
என் வேண்டுதல்
எனக்கு மட்டும் இவ்வளவு
சீக்கிரமாய் எளிதாய்
என் தாயே உன் தயவால்
நிறைவேறியது..

No comments:

Post a Comment