
அதிகாலை நேரத்து
அலாரமாய் தினமும்
என்னை எழுப்பி என்
வாழ்க்கை பயணத்தை
துவக்கி, அதை
தொடரவும்வைக்கிறது
என்னவளது நினைவுகள்
சில சமயங்களில் மட்டும்
அது எனக்கு தொந்தரவாய்
தோன்றினாலும் கூட
என் அலாரம் இன்றி
ஒரு பொழுதும் எனக்கு
விடிகிறதில்லை
என் வாழ்க்கையின்
எல்லா நாட்களும்
இந்த நினைவுகளின்
நிழலிலேயே நகர்கிறது
No comments:
Post a Comment