தேர்வறை
இரவு பகலாய் படித்தேன்
ஆனாலும் கூட எவ்வளவு
யோசித்தும் தேர்வறையில்
என் ஞாபகத்திற்கு
வந்ததெல்லாம்
என் புத்தகத்தில் யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைத்து
அடிக்கடி நான் பார்த்துக்கொண்டே
எப்போதும் ரசித்துக்கொண்டே
இருக்கும்
என் தேவதையின் புகைப்படம்
மட்டும் தான்
No comments:
Post a Comment