Saturday, March 2, 2013

தனிமை விரும்பி













நீ என்னை விட்டுச் 
சென்ற பின்பு
காதல் , நட்பு,
உறவு, பாசம், அன்பு
இதுபோல் எதையுமே
நேசிக்ககூடாது
என்று தீர்மானமாய் 
இருந்தேன்

ஆனாலும் என்னை
அறியாமலே
நேசிக்க துவங்கிவிட்டேன்
என் தனிமையை

 நான் நேசித்ததெல்லாம்
என்னை விட்டு பிரிந்து போக
தனிமையே நீ மட்டுமாவது
என்னை தனித்து விட்டு 
என்னை விலகி விடாதே

செத்தாலும் பிரியமாட்டேன்
என்றவளும் பிரிந்து போனாள் 
ஆனால் நீயோ என் 
உயிர் உள்ள வரை மட்டும்
என்னுடன் இருந்தாலே போதும்

இறப்பிற்கு பிறகோ நீ,
நான் வேறல்ல அப்போது
நாம் ஆகிப்போவோம் 
அப்போது தனிமையே நீ
நினைத்தாலும் கூட
என்னை விலகுதல் ஆகாது 

இன்று நீ என்னை
பிரிவதாயில்லை 
நானும் உன்னை
விடுவதாயில்லை 

No comments:

Post a Comment