Tuesday, March 5, 2013

காதலை தேடிடு














அவ்வளவாய் நேசித்தும்
நீ என்னை ஏன் பிரிந்தாய்
அடிக்கடி என்னையே நான்
கேட்டுக்கொண்டிருக்க
எனக்கே ஒரு நாள்
விடைகிடைத்தது
அதுவும் கேள்வியாகவே

எனக்கு எத்தனையோ
கவிதைகள் மனதுக்குள்
தோன்ற சில கவிதைகள்
மட்டுமே எழுத்துக்களாய்
வெளிப்படுகிறதே
அது ஏனோ??

பதில் என்னமோ
இரண்டு கேள்விக்குமே
ஒன்று தான் என இன்று
புரிந்துகொண்டேன்

எழுதி விட்ட கவிதைகளை
நான் வாசிப்பதுமில்லை
அதை பற்றி
சிந்திப்பதுமில்லை
ஆனால் எழுதாமல்
விடுபட்ட கவிதையை
நான் மறப்பதேயில்லை
சிந்திக்காமல் இருப்பதும்
இல்லை

என்னவளே நீயும் ஒரு
கவிதை என்பதால்
என்னை பிரிந்தால் தான்
உன்னை நினைத்துக்கொண்டே
இருப்பேன் என நினைத்தாயோ??

என்னை நீ புரிந்துகொண்டதும்
இதுதானோ???
கவிதையை மறக்கலாம்
என் உயிரே உன்னை நான்
மறப்பேனோ??

நீ என்னை
நேசித்தாலும், வெறுத்தாலும்
அருகில் இருந்தாலும்,
தொலைவில் மறைந்தாலும்
நாம் சேர்ந்தாலும், பிரிந்தாலும்

நான் உன்னை மறப்பதுமில்லை
எந்நாளும் உன்னை விட்டு
விலகுவதும்மில்லை

என கவிதையை விடவும்
ஏன் இவ்வுலகில்,
எல்லாவற்றையும் விட
உன்னை அதிஅதிகமாய்
நேசிக்கறேன்..

என்னவளே
எந்நாளும் எதற்காகவும்
எனை பிரிந்து செல்ல
காரணம் தேடாதே
மாறாய் உன்னுள் மறைந்து, 
மங்கிகொண்டிருக்கும்
நம் காதலை தேடிடு... 

No comments:

Post a Comment