
இப்படி அடிக்கடி அழகாய்
உன் மின்னல் கண்களை
சிமிட்டி என்
பார்வையை பறிக்காதேயடி
வானத்து மின்னலுக்கும்
தப்பிய என் கண் பார்வை ஓர்
வண்ணத்து பூச்சியின கண்
சிமிட்டலால் பரிபோகலாமோ
இந்த உலகின்
அழகையெல்லாம் ரசிக்க
ஆண்டவன் எனக்காய் தந்தது
இவ்விரு கண்கள் மட்டும் தானே
அந்த கண்களையுமே உன்னிடம்
இழந்துவிட்டு என் உலகமாம்
உன் அழகை எப்படித்தான்
காண்பேனடி??
இந்த உலகின் ஒரே அழகியாம்
உன்னை காணவும்
ஒரு கவிஞனாய் அதை என்
கவிதையில் சொல்லவும்
பார்வை வேண்டுமடி எனக்கு
எனக்கே எனக்காய் மட்டும்
என் கண்களை, அது ரசிக்கும்
என்னவளின் அழகை காண
என்னிடத்திலேயே விட்டுவிடு
No comments:
Post a Comment