Saturday, April 27, 2013

கண் சிமிட்டல்

 











இப்படி அடிக்கடி அழகாய்
உன் மின்னல் கண்களை
சிமிட்டி என்
பார்வையை பறிக்காதேயடி

வானத்து மின்னலுக்கும்  
தப்பிய என் கண் பார்வை ஓர்
வண்ணத்து பூச்சியின கண்
சிமிட்டலால் பரிபோகலாமோ

இந்த உலகின்
அழகையெல்லாம் ரசிக்க
ஆண்டவன் எனக்காய் தந்தது 
இவ்விரு கண்கள் மட்டும் தானே
அந்த கண்களையுமே உன்னிடம் 
இழந்துவிட்டு என் உலகமாம்
உன் அழகை எப்படித்தான்
காண்பேனடி??

இந்த உலகின் ஒரே அழகியாம் 
உன்னை காணவும்
ஒரு கவிஞனாய் அதை என்
கவிதையில் சொல்லவும்
பார்வை வேண்டுமடி எனக்கு

எனக்கே எனக்காய் மட்டும்
என் கண்களை, அது ரசிக்கும் 
என்னவளின் அழகை காண 
என்னிடத்திலேயே விட்டுவிடு

No comments:

Post a Comment