நீ கண்திறந்திருக்கும் போது
பிரகாசிக்கும்
உன் கருவிழியின் வெளிச்சம்
கூட எந்த நாளும் அந்த வெள்ளி
நிலவொளியில் இருப்பதில்லை
உன் பார்வையின் ஒளி
போல் வேறெங்கும்
கண்டதுமில்லை,
எனவே உன் சுடர் விழி
சிறிதேனும் மூடாமல் என்னை
பார்த்துக்கொண்டே இரு,
என் வழியும், வாழ்வும்
அது இரவிலோ, பகலிலோ
எப்போதுமே உன் கண்களின்
வெளிச்சதிலயே வெற்றி நடை
போடட்டும்
No comments:
Post a Comment