என் வாழ்க்கை பயணம்
தொடங்கியது முதலாய், நான் எங்கு
சென்றாலும், பயணம் எவ்வளவு
கடினமாய் இருந்தாலும்
என் பாதைக்கு ஒளி தந்து
என்னுடனயே பயணிக்கிறது
இந்த வான் நிலா
இதற்கும் தான் என்மேல்
எவ்வளவு அக்கறை
இப்படிதானே எண்ணியிருந்தேன்
இப்போது தான் உண்மை புரிகிறது
என்னவளே, எனக்காய் காத்திருக்கும்
உன்னிடம் சேர்க்கத்தானோ
இவ்வளவு பாதுகாப்பாய்
ஆதி முதல் இன்று வரை என்னை
அழைத்து வந்திருக்கிறது
இந்த அழகு நிலா
No comments:
Post a Comment