Saturday, April 27, 2013

பூந்தோட்டம்

 










இனம் இனத்தோடு தான்
சேர்ந்திருக்கும் என்கிறார்களே
பின்பு நீ மட்டும் ஏன் பூக்கள்
இருக்குமிடமாம் பூந்தோட்டதில் 
வசிப்பதேயில்லை 

நீ பூக்களின் ராணி என்பதால்
நீ அவைகளுடன் இருக்கலாகாது
என்று தங்களிடம் இருந்து விலக்கி
வைத்திருக்கிறதோ அந்த
தாழ்வு மனப்பான்மை
கொண்ட பூக்கள்

அவைகளுக்கு தெரியாது போலும்
அவைகள் தங்கள் மணத்தால்
பூந்தோட்டத்தை அழகு செய்கிறது
ஆனால் நீயோ உன் அழகிய
மனதால் பூந்தோட்டத்தையே
உன்னை சுற்றி உருவாகுகின்றாய்

அவற்றின் மணம் மாறும்
உனது மனமோ, மாற்றமே கூட
மாறினாலும் என்னாளுமே மாறாது

இதனால் தானோ
காலையில் பூத்து மாலையில் வாடும்
இந்த அற்ப பூக்களுக்கு என்றுமே
வாடாத புன்னகை பூவாம் உன்னை
ராணி ஆக்கினான் இறைவன்??

நீ அந்த பூக்களின் பூந்தோட்டதில்
சேராமல் எந்நாளும் விலகியே இரு
காரணம் இருக்கிறது
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
பருந்தாகாது என்பதாய் நீ  
அவைகளுடன் சேர்ந்தாலும் உன்
பண்புகள் அவற்றிற்கு வரப்போவதும்
இல்லை.அவற்றால் உன் நல்ல மணமோ
குணமோ எந்நாளும் மாறுவதுமில்லை

அவைகளின் ராணியாம்
உன் போல் வாழ்ந்திட வழியில்லையே
என புலம்பி கடைசிவரை உன் புகழ்
பாடியே  தன் வாழ்நாளை எல்லாம்
கழித்திடட்டும்

No comments:

Post a Comment