Wednesday, August 7, 2013

கைக்குட்டை












கைக்குட்டையை பரிசளித்தால்
உறவு நிலைக்காதாம்
மூட நம்பிக்கை என்று தான்
நம்பியிருந்தேன்

ஆனால் அது உண்மை தான்
போலிருக்கிறது

நீ பரிசாய் தராவிட்டாலும்
உன் கைக்குட்டை என்னிடம்
வந்த பிறகு
நம் எந்த உறவுமே
நிலைக்கவில்லையே

யாரோவாய் இருந்த நீ
என் தோழி ஆனாய்
தோழியாய் இருந்த நீ
என் காதலி ஆனாய்
காதலியாய் இருந்த நீ
என் மனைவியும் ஆனாய்
மனைவியை இருந்து
தாயும் ஆனாய்
என் மகனுக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்

இன்று எனக்குள் மாற்றம்
தந்தவளே நீ இன்னமும்
மாறிக்கொண்டே இருக்கிறாய்
இல்லையில்லை
ஓர் நிலையிலிருந்து
இன்னொரு நிலைக்கு
உயர்ந்து கொண்டு இருக்கிறாய்
இருப்பாய்

இவையெல்லாம்,
எதேற்சியாய் நீ விட்டுச்சென்று
என்னிடம் கிடைத்த
கைகுட்டையின் மகிமையா?
இல்லை நான் மட்டுமே
காணும்படி எழுதிய உன்
கடிதமாய் அதில் வீசும்
உன் வாசனையின்
அற்புதமா??

தெரியவில்லை, ஆனாலும்
அதை நான் இன்னமும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
உனக்கே தெரியாமல்...

No comments:

Post a Comment