இந்நாள் வரையில்
சுயநலமே இல்லாதவன்
நான் என்ற கர்வம்
கொண்டிருந்தேன்
ஆனாலும்
ஆனாலும்
உன்னை என்னவள் என்று
சொல்லிக்கொள்ளும்
போதும்,
உன் அன்பை நான் மட்டுமே
பெற நினைப்பதும், அதற்காய்
முயலும் போதும்
நான் உணர்ந்துகொள்கிறேன்
இந்த உலகின் சுயநலம்
மொத்தமும் என்னிடம் தான்
குடிகொண்டிருக்கிறதென்று
இந்த சுயநலத்தால்
நீ வருத்தப்படுவாய்,
காயப்படுவாய் என
தெரிந்திருந்தும் நான் இன்னமும்
முயன்று கொண்டிருக்கிறேன்
உன்னை புரிந்து கொள்ள அல்ல
என்னையும் என் அன்பையும்
உனக்கு புரியவைக்க
உன் அன்பை நான் மட்டுமே
பெற நினைப்பதும், அதற்காய்
முயலும் போதும்
நான் உணர்ந்துகொள்கிறேன்
இந்த உலகின் சுயநலம்
மொத்தமும் என்னிடம் தான்
குடிகொண்டிருக்கிறதென்று
இந்த சுயநலத்தால்
நீ வருத்தப்படுவாய்,
காயப்படுவாய் என
தெரிந்திருந்தும் நான் இன்னமும்
முயன்று கொண்டிருக்கிறேன்
உன்னை புரிந்து கொள்ள அல்ல
என்னையும் என் அன்பையும்
உனக்கு புரியவைக்க
No comments:
Post a Comment