
"தோழியே!!!" இப்படி
நான் உன்னை அழைக்க
எனக்கு உரிமை உள்ளதா ??
அல்லது இன்னும்
அந்த தகுதி உன்னிடம்
இருக்கிறதா என்பதை
சத்தியமாய் நானறியேன்
காதலில் நொறுக்கப்பட்டு,
இதயம் கிழிக்கப்பட்டு
இறக்கும் தருவாயில் இருந்த
என்னை நீ தானே
உன் நட்பென்னும் செயற்கை
சுவாசத்தால் இன்னமும்
உயிரோடிருக்க வைத்தாய்
புன்னகை, கொஞ்சகாலமாய்
நான் மறந்து போன
எனக்குள் புதைந்து போன
உணர்வினை நீ தானே
தேடிக்கொடுத்தாய் ??
நான் எது எழுதினாலும்
படித்துவிட்டு பாராட்டினாய்
எப்படி வரைந்தாலும்
அழகாய் இருக்கிறதே என்றாய்
எழுதுவதிலும், வரைவதிலும்
எனக்கிருந்த ஆர்வத்தையும்
கண்டுகொண்டவள் நீ மட்டும்
தான்
முன்பெல்லாம் சோதனைகளிலும்
வேதனைகளிலும் தாயிடம் போய்
நின்றவன், இன்றோ ஆறுதலாய் சில
வார்த்தைகளை பெற உன்னிடம்
தானே வந்து நிற்கிறேன்
எந்த நேரத்திலும் என் தீர்மானமே
சிறந்தது என்றிருந்தவன் இன்றோ
அது நீ சரி என்றால் தான்
செயல்படுத்துகிறேன்
என் தாயிற்கு நிகராய், ஏன்
என்னைக்காட்டிலுமள்ளவா
உன்னையும், உன் நட்பினையும்
நான் உளமாற நம்பினேன்
இப்படி எனக்குள் பல மாற்றங்கள்
கொண்டு வந்தவள் நீ,
"நம்மால் தான் இவனுக்குள்
இத்தனை மாற்றம் நாம் இன்றி
இவன் வாழ்வில் உயர்வில்லை"
என நினைத்தாயோ?? அல்லது
"உனக்குள் மற்றம் செய்தவளுக்கு
தனக்குள் மாற்றம் கொண்டு வர
முடியாதா??" என்று இப்படி
மாறிப்போனாயோ ????
என் மாற்றமோ நான்
உயிர் வாழ்வதற்கான
மனமாற்றம், உன் மாற்றமோ
நம் நட்பிற்கு நீ கொடுத்த
ஏமாற்றம்
நீ இவ்வாறு மாறியதற்கும்
என்னை விட்டு விளகியதற்கும்
உன்னிடம் ஆயிரம் காரணம்
இருக்கலாம்..
அனால் இப்போது உன் நட்பு
என்னுடைதில்லை என்பது
மட்டும் மறுக்கப்பட முடியாத
உண்மை
ஆணோ, பெண்ணோ
ஒரே காதல், ஒரே கல்யாணம்
என்ற வழியில் ஒரே நட்பு
என்று இருந்திடல் வேண்டும்
காரணம் உயிர் ஒன்றென்பதால்
தான், அதன் மதிப்பும் அதிகம்
அதை பாதுகாக்க நம்
படும் சிரத்தையும் அதிகம்...
என்னைப்பொறுத்த வரை நட்பும்
உயிர் போன்றதே தான்
No comments:
Post a Comment