Saturday, August 17, 2013

பரிசு

















ஏகப்பட்ட புகார்கள்
என்மேல் 
நான் அதிகமாய்
யாரிடமும்
பேசுவதில்லையாம்

ஆனால் அவர்களுக்கு
என்ன தெரியும்
எனக்கே எனக்காய்
வரும் என்னவளிடம்
வாழ்நாள் எல்லாம்
பேசிட நான் என் 
வார்த்தைகளை நான்
சேமிக்கிறேன் என்று

ஒரு வேளை அந்த
சேமிப்பை எழுத்துக்களாய்
செலவிட்டால் அவளுக்கென
கவிதை தொகுப்பு
பரிசளிப்பேன் என்னோடு
அவள் வாழும் ஒவ்வொரு
நாளும்

No comments:

Post a Comment