ஏகப்பட்ட புகார்கள்
என்மேல்
நான் அதிகமாய்
யாரிடமும்
பேசுவதில்லையாம்
ஆனால் அவர்களுக்கு
என்ன தெரியும்
எனக்கே எனக்காய்
வரும் என்னவளிடம்
வாழ்நாள் எல்லாம்
பேசிட நான் என்
வார்த்தைகளை நான்
சேமிக்கிறேன் என்று
ஒரு வேளை அந்த
சேமிப்பை எழுத்துக்களாய்
செலவிட்டால் அவளுக்கென
கவிதை தொகுப்பு
பரிசளிப்பேன் என்னோடு
அவள் வாழும் ஒவ்வொரு
நாளும்
No comments:
Post a Comment