Thursday, August 8, 2013

அழாதே












தோழியே, எதற்காக
இப்போது நீ அழுகிறாய்??

இன்னமும் உன்னை
மட்டுமே என் உயிராய்
நம்பும் என்னை
சரியாய் கொல்லாமல்
குற்றுயிராய் விட்டுச்செல்ல
மனமில்லாமல்
பெண்களின் கடைசி கட்ட
கூரான ஆயுதத்தை
எடுத்திருக்கிறாயோ???

அது தேவைபடாது என்று
தான் நினைக்கிறேன், உன்
வார்த்தையாலும்,
உன் பிரிவாலும் நான் என்றோ
இறந்தாகிவிட்டேன்

 ஒருவேளை எனக்கு 
சிறிது உயிர் இருந்திருந்தாலும் 
உன் கண்ணீர் கீழே விழுமுன்
அதை ஏந்தியிருப்பேன், உன்
துயர் நீக்கி இருப்பேன்
சவமாகி விட்டதால் தானோ
என் கைகள் கட்டப்பட்டு
உன் அழுகையை வெறுமென
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இனியாவது என்னை
நிம்மதியாய் விடு, ஏனெனில் 
உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும் இறந்து கிடக்கும்
என் உடலையும் கூட
கூரு போடுகின்றது...

எனக்காய்  அல்ல, இனி 
எதற்காகவும் அழாதே
என்ற வேண்டுதலுடன்
தொடர்கிறேன் என் கடைசி
பயணத்தை...... 

No comments:

Post a Comment