Saturday, August 17, 2013
தண்டனை
மறப்போம் மன்னிபோம்
என்பதை தவறாக
புரிந்து கொண்டாயோ
நீ, என்னை மறந்து விட்டு
தூக்கி எறிந்துவிட்டு
போனதை மிக எளிதாய்
மன்னித்துவிடு என்கிறாயே
எனை கொன்றாலும் கொன்றவனை
மன்னிக்க வேண்டுமென
நினைப்பவன் நான், ஆனாலும்
ஏனோ தெரியவில்லை
முதல் முறையாய் மன்னிக்க
மனம் மறுக்குதடி
காரணம் நீ என்னை
கொன்றிருக்கலாம், என் மனதை
கொன்றாயே அது ஏனடி??
காதலியாய் அல்ல இப்போது
கொலையாலியாய் அல்லவா
தெரிகிறாய் என் கண்களுக்கு
கொலையாளிக்கும் தன் தவறை
உணரும் போது மன்னிப்புண்டு
அது கூட உனக்கு கிடைக்காமல்
இருக்கும் போதே புரியட்டும்
உன் பாவத்தின் அளவு
பழகிய பாவத்திற்காய்
மன்னிக்க முயல்கிறேன்
ஒருவேளை முடியாமல்
போனால் நீ மறந்து விடு
உனக்கு தான் அது பழகிவிட்ட
பழக்கமாயிற்றே
ஆனாலும் நாம் இருவருமே
நம் காதலுக்கு பதில் சொல்லியாக
வேண்டுமே
என் உண்மைக்காதல் உன்னை
மறக்குமோ மன்னிக்குமா
என்பதை நானறியேன்
அதன் கையிலேயே இதை
விட்டு விடுகிறேன்
என் பயம் எல்லாம் ஒன்று
தான் காதல் என்னை
மன்னிக்குமா என்பது தானது
உன்னை என் காதலியாய்
தேர்ந்தெடுத்தற்கு
மரணத்தை தண்டனையாய்
பெற்றுவிடுவேனோ??
அதனிடம்
உன்னை நான் மன்னித்தால்
எனக்கு தண்டனை உறுதி
உன்னை நான் தண்டித்தால்
எனக்கு மன்னிப்பு உறுதி
பிழைத்துப்போ
வாழ்ந்து விட்டு போ
நானே ஏற்றுகொள்கிறேன்
தண்டனையை
ஒரே நட்பு

"தோழியே!!!" இப்படி
நான் உன்னை அழைக்க
எனக்கு உரிமை உள்ளதா ??
அல்லது இன்னும்
அந்த தகுதி உன்னிடம்
இருக்கிறதா என்பதை
சத்தியமாய் நானறியேன்
காதலில் நொறுக்கப்பட்டு,
இதயம் கிழிக்கப்பட்டு
இறக்கும் தருவாயில் இருந்த
என்னை நீ தானே
உன் நட்பென்னும் செயற்கை
சுவாசத்தால் இன்னமும்
உயிரோடிருக்க வைத்தாய்
புன்னகை, கொஞ்சகாலமாய்
நான் மறந்து போன
எனக்குள் புதைந்து போன
உணர்வினை நீ தானே
தேடிக்கொடுத்தாய் ??
நான் எது எழுதினாலும்
படித்துவிட்டு பாராட்டினாய்
எப்படி வரைந்தாலும்
அழகாய் இருக்கிறதே என்றாய்
எழுதுவதிலும், வரைவதிலும்
எனக்கிருந்த ஆர்வத்தையும்
கண்டுகொண்டவள் நீ மட்டும்
தான்
முன்பெல்லாம் சோதனைகளிலும்
வேதனைகளிலும் தாயிடம் போய்
நின்றவன், இன்றோ ஆறுதலாய் சில
வார்த்தைகளை பெற உன்னிடம்
தானே வந்து நிற்கிறேன்
எந்த நேரத்திலும் என் தீர்மானமே
சிறந்தது என்றிருந்தவன் இன்றோ
அது நீ சரி என்றால் தான்
செயல்படுத்துகிறேன்
என் தாயிற்கு நிகராய், ஏன்
என்னைக்காட்டிலுமள்ளவா
உன்னையும், உன் நட்பினையும்
நான் உளமாற நம்பினேன்
இப்படி எனக்குள் பல மாற்றங்கள்
கொண்டு வந்தவள் நீ,
"நம்மால் தான் இவனுக்குள்
இத்தனை மாற்றம் நாம் இன்றி
இவன் வாழ்வில் உயர்வில்லை"
என நினைத்தாயோ?? அல்லது
"உனக்குள் மற்றம் செய்தவளுக்கு
தனக்குள் மாற்றம் கொண்டு வர
முடியாதா??" என்று இப்படி
மாறிப்போனாயோ ????
என் மாற்றமோ நான்
உயிர் வாழ்வதற்கான
மனமாற்றம், உன் மாற்றமோ
நம் நட்பிற்கு நீ கொடுத்த
ஏமாற்றம்
நீ இவ்வாறு மாறியதற்கும்
என்னை விட்டு விளகியதற்கும்
உன்னிடம் ஆயிரம் காரணம்
இருக்கலாம்..
அனால் இப்போது உன் நட்பு
என்னுடைதில்லை என்பது
மட்டும் மறுக்கப்பட முடியாத
உண்மை
ஆணோ, பெண்ணோ
ஒரே காதல், ஒரே கல்யாணம்
என்ற வழியில் ஒரே நட்பு
என்று இருந்திடல் வேண்டும்
காரணம் உயிர் ஒன்றென்பதால்
தான், அதன் மதிப்பும் அதிகம்
அதை பாதுகாக்க நம்
படும் சிரத்தையும் அதிகம்...
என்னைப்பொறுத்த வரை நட்பும்
உயிர் போன்றதே தான்
பரிசு
ஏகப்பட்ட புகார்கள்
என்மேல்
நான் அதிகமாய்
யாரிடமும்
பேசுவதில்லையாம்
ஆனால் அவர்களுக்கு
என்ன தெரியும்
எனக்கே எனக்காய்
வரும் என்னவளிடம்
வாழ்நாள் எல்லாம்
பேசிட நான் என்
வார்த்தைகளை நான்
சேமிக்கிறேன் என்று
ஒரு வேளை அந்த
சேமிப்பை எழுத்துக்களாய்
செலவிட்டால் அவளுக்கென
கவிதை தொகுப்பு
பரிசளிப்பேன் என்னோடு
அவள் வாழும் ஒவ்வொரு
நாளும்
Friday, August 16, 2013
Thursday, August 8, 2013
சுயநலம்
இந்நாள் வரையில்
சுயநலமே இல்லாதவன்
நான் என்ற கர்வம்
கொண்டிருந்தேன்
ஆனாலும்
ஆனாலும்
உன்னை என்னவள் என்று
சொல்லிக்கொள்ளும்
போதும்,
உன் அன்பை நான் மட்டுமே
பெற நினைப்பதும், அதற்காய்
முயலும் போதும்
நான் உணர்ந்துகொள்கிறேன்
இந்த உலகின் சுயநலம்
மொத்தமும் என்னிடம் தான்
குடிகொண்டிருக்கிறதென்று
இந்த சுயநலத்தால்
நீ வருத்தப்படுவாய்,
காயப்படுவாய் என
தெரிந்திருந்தும் நான் இன்னமும்
முயன்று கொண்டிருக்கிறேன்
உன்னை புரிந்து கொள்ள அல்ல
என்னையும் என் அன்பையும்
உனக்கு புரியவைக்க
உன் அன்பை நான் மட்டுமே
பெற நினைப்பதும், அதற்காய்
முயலும் போதும்
நான் உணர்ந்துகொள்கிறேன்
இந்த உலகின் சுயநலம்
மொத்தமும் என்னிடம் தான்
குடிகொண்டிருக்கிறதென்று
இந்த சுயநலத்தால்
நீ வருத்தப்படுவாய்,
காயப்படுவாய் என
தெரிந்திருந்தும் நான் இன்னமும்
முயன்று கொண்டிருக்கிறேன்
உன்னை புரிந்து கொள்ள அல்ல
என்னையும் என் அன்பையும்
உனக்கு புரியவைக்க
அழாதே
தோழியே, எதற்காக
இப்போது நீ அழுகிறாய்??
இன்னமும் உன்னை
மட்டுமே என் உயிராய்
நம்பும் என்னை
சரியாய் கொல்லாமல்
குற்றுயிராய் விட்டுச்செல்ல
மனமில்லாமல்
பெண்களின் கடைசி கட்ட
கூரான ஆயுதத்தை
எடுத்திருக்கிறாயோ???
அது தேவைபடாது என்று
தான் நினைக்கிறேன், உன்
வார்த்தையாலும்,
உன் பிரிவாலும் நான் என்றோ
இறந்தாகிவிட்டேன்
ஒருவேளை எனக்கு
சிறிது உயிர் இருந்திருந்தாலும்
உன் கண்ணீர் கீழே விழுமுன்
அதை ஏந்தியிருப்பேன், உன்
துயர் நீக்கி இருப்பேன்
சவமாகி விட்டதால் தானோ
என் கைகள் கட்டப்பட்டு
உன் அழுகையை வெறுமென
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
இனியாவது என்னை
நிம்மதியாய் விடு, ஏனெனில்
உன் ஒவ்வொரு கண்ணீர்
துளியும் இறந்து கிடக்கும்
என் உடலையும் கூட
கூரு போடுகின்றது...
எனக்காய் அல்ல, இனி
எதற்காகவும் அழாதே
என்ற வேண்டுதலுடன்
தொடர்கிறேன் என் கடைசி
பயணத்தை......
Wednesday, August 7, 2013
கைக்குட்டை
கைக்குட்டையை பரிசளித்தால்
உறவு நிலைக்காதாம்
மூட நம்பிக்கை என்று தான்
நம்பியிருந்தேன்
ஆனால் அது உண்மை தான்
போலிருக்கிறது
நீ பரிசாய் தராவிட்டாலும்
உன் கைக்குட்டை என்னிடம்
வந்த பிறகு
நம் எந்த உறவுமே
நிலைக்கவில்லையே
யாரோவாய் இருந்த நீ
என் தோழி ஆனாய்
தோழியாய் இருந்த நீ
என் காதலி ஆனாய்
காதலியாய் இருந்த நீ
என் மனைவியும் ஆனாய்
மனைவியை இருந்து
தாயும் ஆனாய்
என் மகனுக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்
இன்று எனக்குள் மாற்றம்
தந்தவளே நீ இன்னமும்
மாறிக்கொண்டே இருக்கிறாய்
இல்லையில்லை
ஓர் நிலையிலிருந்து
இன்னொரு நிலைக்கு
உயர்ந்து கொண்டு இருக்கிறாய்
இருப்பாய்
இவையெல்லாம்,
எதேற்சியாய் நீ விட்டுச்சென்று
என்னிடம் கிடைத்த
கைகுட்டையின் மகிமையா?
இல்லை நான் மட்டுமே
காணும்படி எழுதிய உன்
கடிதமாய் அதில் வீசும்
உன் வாசனையின்
அற்புதமா??
தெரியவில்லை, ஆனாலும்
அதை நான் இன்னமும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
உனக்கே தெரியாமல்...
Tuesday, August 6, 2013
Subscribe to:
Posts (Atom)