என்ன தான் தொலைத்தேனோ
தெரியவில்லை ஆனாலும்
ஒரு வகை தேடலில்
துவங்கி தொலைத்ததை
கண்டுபிடிக்க முடியாத
சோகத்திலேயே
முடிந்து விடுகின்றது
என் ஒவ்வொரு நாளும்
தேடல் வாழ்க்கையில்
சுவாரஸ்யம் தான்
ஆனாலும் வாழ்க்கையே
தேடலலானால் ??
தேடியது கிடைக்காமலே
போனால்??
என்ன சொல்ல
அதுதான் சொல்ல
முடியா வேதனை
நானும் இந்நாளில்
அப்படியொரு
வேதனையில் தான்
சிக்கித்தவிக்கிறேன்
No comments:
Post a Comment