தனிமைச்சிறையில்
நான் உன்னை விரும்பியதால்
நீ என் மனச்சிறையில்
நீ என்னை விரும்பியதால்
நீ அடைக்கப்பட்டதோ
உன் வீட்டுச்சிறையில்
இரண்டிலுமே
நீ இருப்ப தென்னமோ
தனிமைச்சிறையில்
இருவருமே தானே
விரும்பினோம்
உனக்கும் மட்டுமே ஏன்
இந்த தண்டனை
உடல் இங்கிருக்க என்
உயிரை மட்டுமே
தண்டிப்பது தானோ
புனிதமாய் நாம் நம்பும்
இந்த காதல்??
No comments:
Post a Comment