Thursday, February 28, 2013

அசட்டுச்சிரிப்பு

இவள் 
சீக்கிரம் வாடும் பூக்களை 
விற்று வாழ்ந்தும்  கூட 
இவள்  
முகத்தில் வாடாமல்
இன்னமும் வாழ்கிறது
மௌனமாய், நாம்
யாருமே கண்டிராத  
ஓர் அசட்டுச்சிரிப்பு

அதில் மயங்கியதால் தான்
தன்னை பறிக்கும் போதும்
கூட எந்த பூவும் 
இவளிடம்
கோபித்துக்கொள்வதில்லை  

No comments:

Post a Comment