காகமது கரைந்தால்
உறவுகள் தேடி வருமென
கேள்விபட்டிருக்கிறேன்
அது உண்மை தான் போலும்
காகத்திற்கு எப்படி தெரியும்
என் உயிர் உறவாய்
என் வாழ்வில் நீ
வந்துவிட்டாய் என
இன்று நாள் முழுவதுமாய்
என்னை சுற்றியே
கத்திக்கொண்டிருக்கிறது
ஆனால் எப்போதும் போல்
அல்லாமல் அந்த சத்தமும்
கூட இன்னிசையாய் தான்
கேட்கின்றது
ஏனென்றால்,
எனக்குப்பிறகு என் காதலை
கண்டு சொன்னதாள் அதுவும்
எனக்கு எங்கள்
காதல் பறவையாய் அல்லவா
ஆகிவிட்டது...
No comments:
Post a Comment