Thursday, February 28, 2013

புகைப்படம்












அன்பே நீ
படமெடுக்க அந்த
ஆழ்கடலும் அலையடித்து 
ஆர்ப்பரித்து சிரிக்கின்றது

அந்த சூரியனும் 
அஸ்தமனமாக மறுக்கிறது

நிலவோ வெட்கத்தில்
மேகத்துக்குள் மறைந்து தன் 
முகம் காட்ட மறுக்கின்றது

இதெல்லாம் விடுத்தது
அழகாய் புகைப்படம் 
எடுத்திருக்கின்றாயே
எல்லோரிடமும்  
மறைத்தே வைத்திருக்கும்
என் மனதை

No comments:

Post a Comment